Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சகிப்புத் தன்மை இல்லாததால் அதிகரிக்கும் மாணவ மரணங்கள்

Webdunia
செவ்வாய், 5 டிசம்பர் 2017 (14:10 IST)
சமீபத்தில் பள்ளிக் குழந்தைகளின் தற்கொலைகள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதன் தொடர்ச்சியாக ராஜஸ்தான் மாநிலம் கோடாவில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியர் திட்டியதால் மனமுடைந்து சிறுவன் உயிரிழந்துள்ளான். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
கோடாவில் உள்ள வாட் ஜோதிபா மேல்நிலைப்பள்ளியில் மோகன் என்ற சிறுவன் படித்து வந்துள்ளான். சம்பவத்தன்று சிறுவன் வீட்டுப் பாடத்தை எழுதவில்லை என்பதற்காக ஆசிரியர் சக மாணவர்கள் முன்னிலையில் கடுமையாக அடித்துள்ளார். இதனால் மாணவன் மிகவும் சோகத்தில் இருந்ததாக மோகனின் பெற்றோர் தெரிவித்தனர். மாணவனின் உடல் நிலை மிகவும் மோசமானதால் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
 
இதுகுறித்து மாணவனின் பெற்றோர் மஹாவீர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். விசாரணையில் பள்ளி நிர்வாகி சுமன், மாணவர்கள் நல்லொழுக்கத்தை கடைபிடிக்க கண்டிப்போடு இருக்க வேண்டிய கட்டாயம் இருப்பதாகவும், அதனால் மாணவனின் மரணத்திற்கும் நிர்வாகத்திற்கும் எந்த பொறுப்புமில்லை என்றார். மோகன் உடல்நிலை சரியில்லாத காரணத்தினாலே உயிரிழந்ததாக சுமன் கூறினார்.
 
இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments