Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஈரான் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இந்திய மீனவர்கள் 9 பேர் விடுதலை: சுஷ்மா சுவராஜ்

Webdunia
புதன், 14 அக்டோபர் 2015 (13:13 IST)
போதைப் பொருள் கடத்தல் வழக்கில் ஈரான் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த இந்திய மீனவர்கள் 9 பேர் விடுவிக்கப்பட்டுள்ளதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.

 
இது குறித்து தனது டூவிட்டர் பக்கத்தில் சுஷ்மா சுவராஜ் கூறுகையில், "எனது வேண்டுகோளை ஏற்று போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 9 பேரை ஈரான் அரசு விடுவித்துள்ளது".


 
 
"சிறைச்சாலையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் 9 பேரும் நாளை தாயகம் திரும்புவார்கள்".
 
"மீனவர்களை விடுதலை செய்ய உதவிய ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜாவத் ஷாரிப்புக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்".இவ்வாறு சுஷ்மா சுவராஜ் தனது டூவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

தயார் நிலையில் இருங்கள்..! மீனவர்களுக்கு கலெக்டர் போட்ட முக்கிய உத்தரவு..!!

சென்னையை பொருத்தவரை கோடைமழை ஒரு வரம்: தமிழ்நாடு வெதர்மேன்

என்னுடன் விவாதிக்க உறுதியாக வரமாட்டார்..! மோடியை சீண்டிய ராகுல் காந்தி.!!

Show comments