Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செம்மரம் கடத்த சென்றதாக 84 தமிழர்கள் ஆந்திராவில் கைது

Webdunia
வெள்ளி, 2 மார்ச் 2018 (12:29 IST)
ஆந்திரா மாநிலத்தில் செம்மரம் வெட்டச் சென்றதாக 84 தமிழர்களை ஆந்திர மாநில காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
 
ஆந்திராவில் செம்மரங்கள் வெட்டி கடத்தப்படுவதை தடுக்க ஆந்திர மாநில காவல்துறையினர் தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். இதற்கென்று தனிப்பிரிவு காவல் படையும் அமைத்துள்ளனர்.
 
இந்நிலையில் ஆந்திர மாநிலத்தில் உள்ள ஆஞ்சநேயபுரம் சோதனைச் சாவடிக்கு லாரி ஒன்று வேகமாக வந்துள்ளது. அதனை மடக்கி போலீசார் சோதனை செய்துள்ளனர். அந்த லாரியில் திருவண்ணாமலை மற்றும் வேலூர் மாவட்டங்களைச் சேர்ந்த தமிழர்கள் 84 பேர் இருந்துள்ளனர். அவர்களை போலீசார் செம்மரம் கடத்த வந்ததாக கூறி கைது செய்துள்ளனர். ஆனால், கைது செய்யப்பட்ட தமிழர்கள் நாங்கள் கூலி வேலை செய்யவதற்காக அந்த லாரியில் வந்ததாக கூறுகின்றனர்.
  
ஏற்கனவே ஆந்திராவில் செம்மரம் கடத்தியதாக 20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 5 தமிழர்கள் கடப்பா மாநிலத்தில் மர்மமான முறையில் இறந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments