Webdunia - Bharat's app for daily news and videos

Install App

83% இளைஞர்களுக்கு வேலையில்லை: பிரியங்கா காந்தி அடுக்கடுக்கான கேள்விகள்..!

Siva
வியாழன், 28 மார்ச் 2024 (18:31 IST)
இந்திய இளைஞர்கள் 83 சதவீதம் பேர் வேலை வாய்ப்பு இல்லாமல் இருப்பது ஏன் என்று பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பி உள்ளார்.

நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்காக தனது பிரச்சாரத்தை பிரியங்கா காந்தி ஆரம்பித்துள்ள நிலையில் மோடி அரசை நோக்கி அவர் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்திய இளைஞர்களில் 83 சதவீதம் பேர் வேலை வாய்ப்பு இல்லாமல் இருப்பது ஏன் என்று கேள்வி எழுப்பிய அவர் ஆண்டுக்கு இரண்டு கோடி வேலை வாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி என்ன ஆனது என்றும் கேள்வி எழுப்பி உள்ளார்

மேலும் நாட்டில் 30 லட்சம் அரசு பணியிடங்கள் காலியாக இருப்பது ஏன் என்று கேள்வி எழுப்பி அவர் ஒவ்வொரு தேர்வுக்கும் வினாத்தாள் கசிவது எப்படி என்றும் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி உள்ளார்

இந்த கேள்விகளுக்கு பிரதமர் மோடி மற்றும் பாஜகவினர் என்ன பதில் கூறப் போகின்றனர் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். இந்த நிலையில் இந்தியாவில் 83 சதவீதம் பேர் வேலை வாய்ப்பு இல்லாமல் இருப்பது உண்மையா? என்றும் அத்தனை இளைஞர்கள் வேலை வாய்ப்பு இல்லாமல் இருப்பதற்கு சாத்தியமே இல்லை என்றும் நெட்டிசன்கள் பிரியங்கா காந்திக்கு பதில் அடி கொடுத்து வருகின்றனர்.


Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

சென்னையின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை.. மகிழ்ச்சியில் பொதுமக்கள்..!

குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம் கலந்த விவகாரம்: சிபிசிஐடி வழக்குப்பதிவு

ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான ஈரான் அதிபர் என்ன ஆனார்? 12 மணி நேரமாக மீட்பு பணி..!

இன்று 4 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. ரெட் அலர்ட் எச்சரிக்கை..!

8 முறை வாக்களித்த இளைஞர் கைது.. தேர்தல் பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை

அடுத்த கட்டுரையில்
Show comments