Webdunia - Bharat's app for daily news and videos

Install App

7ஆம் வகுப்பு மாணவி 6 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம்

7ஆம் வகுப்பு மாணவி கும்பல் பாலியல் பலாத்காரம்

Webdunia
ஞாயிறு, 13 டிசம்பர் 2015 (18:44 IST)
7ஆம் வகுப்பு படிக்கும் சிறுமி, 6 பேர் கொண்ட கும்பலால், பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். அவர்களில் ஐந்து பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
 

 
புதுடெல்லி ரன்ஹோலா பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் சிறிமி 7ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர், வியாழனன்று மாலை பள்ளி முடிந்து வெளியே வந்துள்ளார். அப்போது, அவரது குடும்ப நண்பர்கள் இருவர், சிறுமி வீட்டிற்கு அழைத்துச் செல்வதாக கூறி காரில் ஏற்றியுள்ளனர்.
 
அந்த காரில் மேலும் 4 பேர் இருந்துள்ளனர். பின்னர் இந்த 6 பேரும் சேர்ந்து, ஓடும் காரிலேயே சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கியுள்ளனர்.
 
இதற்கிடையில், காரை கண்காணித்த காவல்துறை ரோந்து வாகனம் ஒன்று, இந்த காரை விரட்டி சென்று மடக்கியுள்ளது. அப்போது, ஒருவர் தப்பியோடிய நிலையில் மற்ற 5 பேரும் காவல் துறையினரிடம் சிக்கியுள்ளனர். இதையடுத்து அவர்களை காவல் துறையினர் கைது செய்தனர். காரையும் பறிமுதல் செய்தனர்.

பா.ஜ.கவின் பிளவுவாத கனவு ஒருபோதும் பலிக்காது: முதல்வர் ஸ்டாலின் அறிக்கை

5 நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு: தயாராகும் தேசிய பேரிடர் மீட்பு படை..!

ராகுல் காந்தியின் ரேபேலி உள்பட 49 தொகுதிகளுக்கு பிரச்சாரம் நிறைவு..மே 20ல் வாக்குப்பதிவு..!

சென்னையில் மெட்ரோ பணிகள்.. இன்று முதல் முக்கிய பகுதியில் போக்குவரத்து மாற்றம்..!

4 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்