Webdunia - Bharat's app for daily news and videos

Install App

4ஆம் கட்ட தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது

Webdunia
திங்கள், 29 ஏப்ரல் 2019 (07:21 IST)
இந்தியாவில் மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறவிருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்திருந்த நிலையில் ஏற்கனவே மூன்று கட்ட தேர்தல் முடிந்துவிட்டது. இந்த நிலையில் இன்று காலை சரியாக 7 மணிக்கு நான்காம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர்.
 
4ம் கட்ட மக்களவை தேர்தல் 9 மாநிலங்களில் மொத்தம் 71 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இன்று வாக்குப்பதிவு நடைபெறும் மாநிலங்கள் மற்றும் தொகுதிகளின் எண்ணிக்கை விபரங்கள் பின்வருமாறு:
 
பீகார்: 5
ஜம்முகாஷ்மீர்: 1
ஜார்கண்ட்: 3
மத்தியபிரதேசம்: 6
மகாராஷ்டிர: 17
ஒடிஷா: 6
ராஜஸ்தான்: 13
உத்தரபிரதேசம்: 13
மேற்குவங்காளம்: 8
 
இதில் ஜம்முகாஷ்மீரில் உள்ள ஒரு தொகுதியில் மூன்றில் ஒரு பகுதியில் மட்டும் இன்று தேர்தல் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

காதல் தோல்வி.. 16 வயது சிறுமி, 14 வயது சிறுவன் தற்கொலை.. சென்னை கடலில் நடந்த பரிதாபம்..!

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு: மேலும் ஒருவர் கைது

போக்குவரத்து - காவல்துறை மோதல்.. முதல்வருக்கு பறந்த கடிதம்..!

பத்திரகாளியம்மன் கோவிலின் வைகாசி திருவிழாவை முன்னிட்டு - ஏராளமான பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து நேர்த்திக் கடன்!

குப்பைகள் கொட்டும் கூடராமாக மாற்றி வரும் நகராட்சி நிர்வாகம் குப்பை கொட்டுவதற்காக வந்த நகராட்சி வண்டியின் வீடியோ வெளியாகி பரபரப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments