Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இடிந்து விழுந்த 4 மாடி கட்டிடம்: மீட்பு பணிகள் தீவிரம்

Webdunia
சனி, 24 ஆகஸ்ட் 2019 (09:30 IST)
மஹாராஷ்டிராவில் இன்று அதிகாலை 4 மாடி குடியிருப்பு கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்தது.

மஹாராஷ்டிரா மாநிலம் மும்பை அருகே பிவண்டி என்னும் பகுதியில் ஒரு 4 மாடி குடியிருப்பு கட்டிடம் விரிசல் ஏற்பட்டு இடிந்து விழும் நிலையில் இருந்தது. இது பற்றி தகவலறிந்த அதிகாரிகள், பொதுமக்களை வெளியேறும்படி கூறினர்.

அதன்படி, அங்கு வசித்தவர்களில் பலர் தங்களது உடமைகளை எடுத்துகொண்டு வெளியேறினர். இந்நிலையில் இன்று அதிகாலையில் சிலர் தங்கள் பொருட்களை எடுப்பதற்காக உள்ளே சென்றனர், அப்போது திடீரென கட்டிடம் இடிந்து விழுந்தது. இதில் உள்ளே சென்றவர்கள் அனைவரும் சிக்கி கொண்டனர்.

இதன் பிறகு மீட்பு குழுவினர், கட்டிட இடிபாடுகளில் சிக்கிய 2 பேரின் உடல்களை மீடனர். 4 பேர் பலத்த காயம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் 10-க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கி உள்ளதால் மீட்பு குழுவினர் மீட்பு பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதலமைச்சர் போராடி தமிழகத்தில் நீட் விலக்கை கொண்டு வருவார்: சபாநாயகர் அப்பாவு

பெண் மருத்துவரை திருமணம் செய்வதாக வாக்குறுதி அளித்து பாலியல் வன்கொடுமை: ஐ.ஏ.எஸ் அதிகாரி மீது வழக்குப்பதிவு..

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை – மத போதகர் ஜான் ஜெபராஜ் கைது

திமுக கூடாரத்தை விரட்டியடிக்க போகும் கூட்டணி" – நயினார் நாகேந்திரன் ஆவேசம்

திறந்த ஒருசில மாதங்களில் பராமரிப்பு பணிகள்.. குமரி கண்ணாடி இழை பாலத்திற்கு செல்ல தடை..!

அடுத்த கட்டுரையில்
Show comments