Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே குடும்பத்தில் 350 வாக்காளர்கள்.. மிகப்பெரிய குடும்பத்தை கவர அரசியல் கட்சிகள் போட்டி..!

Siva
புதன், 17 ஏப்ரல் 2024 (08:41 IST)
அசாம் மாநிலத்தில் ஒரே குடும்பத்தில் 350 வாக்காளர்கள் இருப்பதை அடுத்து அந்த குடும்பத்தின் வாக்குகளை பெற அரசியல் கட்சிகள் போட்டி போடுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாராளுமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ள நிலையில் முதல் கட்ட வாக்கு பதிவு நாளை மறுநாள் நடைபெற உள்ளது என்பதும் அரசியல் கட்சிகள் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றன என்பதையும் பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் தேர்தல் குறித்த சில ஆச்சரியமான தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் அசாம் மாநிலத்தில் ஒரே குடும்பத்தை ஒரே குடும்பத்தில் 350 வாக்காளர்கள் இருப்பது அனைவரையும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அசாம் மாநிலத்தில் உள்ள புலாகுரி நேபாளி பாம்  என்ற பகுதியில் 300 குடும்பங்கள் வசித்து வரும் நிலையில் இதில் ஒரு குடும்பத்தில் மட்டும் 350 வாக்காளர்கள் இருப்பதாக தெரிகிறது. 54 ஆண்டுகளுக்கு மேல் கிராம தலைவராக இருக்கும் ராம் பகதூர் என்ற குடும்பத்தில் தான் 350 வாக்காளர்கள் உள்ளன

இவருக்கு ஐந்து மனைவிகள், 12 மகன்கள் மற்றும் ஒன்பது மகள்கள் உள்ளதாகவும் 56 பேரக்குழந்தைகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த குடும்பத்தில் உள்ள சிலர் நன்றாக படித்து பல மாநிலங்களில் வேலை செய்து வருவதாகவும் ஓட்டு போடுவதற்காக தற்போது அனைவரும் வீட்டிற்கு வந்திருப்பதாகவும் கூறப்படுகிறது

சுமார் 350 வாக்காளர்கள் உள்ள மிகப்பெரிய குடும்பம் என்ற பெயர் பெற்றுள்ள இந்த குடும்பத்தின் ஆதரவை பெற அரசியல் கட்சிகள் தீவிரமாக முயற்சி செய்து வருகின்றன.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக ஆட்சியில் கஞ்சா வியாபாரிகள் சுதந்திரமாக செயல்படுகின்றனர்.. ஈபிஎஸ்

2026ல் திமுக, தவெக இடையேதான் போட்டி: விஜய் பேச்சுக்கு அதிமுக தலைவர்களின் ரியாக்சன்..!

செல்வப்பெருந்தகையின் மாபெரும் ஊழல்.. திமுக அரசும் உடந்தையா? அண்ணாமலை கேள்வி..!

2026ல் விஜய்தான் முதலமைச்சர் என உலகத்துக்கே தெரியும்: புஸ்ஸி ஆனந்த் பேச்சு

3 நாளில் 3 லட்ச ரூபாய் பிச்சை எடுத்து சம்பாதித்தவர் கைது.. அதிர்ச்சி தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments