Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கம்போடியா நாட்டில் 3000 இந்திய பெண்கள் அடிமையா? நிர்வாணமாக சித்திரவதை? அதிர்ச்சி தகவல்..!

Siva
புதன், 10 ஜூலை 2024 (11:35 IST)
கம்போடியா நாட்டில் 3000 பெண்கள் அடிமையாக இருப்பதாகவும் அவர்களில் சிலர் சித்திரவதை செய்யப்படுவதாகவும் அங்கிருந்து தப்பித்து வந்த ஒருவர் கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது,

இதுகுறித்து ஐடி ஊழியர்  முன்சீப் பிரகாஷ் என்பவர் கூறியபோது ’தான் வெளிநாட்டில் வேலை பெறுவதற்கு பதிவு செய்திருந்த நிலையில் விஜய் என்பவர் தன்னை தொடர்பு கொண்டு ஆஸ்திரேலியாவில் வேலை வாய்ப்பு இருப்பதாக கூறி மலேசியாவுக்கு வரச் சொன்னார்.

அதன் பிறகு அங்கிருந்து சீன கும்பல் என்னுடைய பாஸ்போர்ட் பறித்துக் கொண்டு கம்போடியா நாட்டிற்கு அழைத்துச் சென்றனர். அங்கு பெண்கள் பெயரில் சமூக வலைதள பக்கங்கள் போலியாக உருவாக்கப்பட்டு அதில் பணிபுரிய வேண்டும் என்று எனக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

என்னுடைய பிரச்சனைகளை ஒரு செல்பி வீடியோவாக பதிவு செய்து என்னுடைய சகோதரிக்கு அனுப்பிய நிலையில் என்னுடைய சகோதரி சம்பந்தப்பட்ட தூதரக அதிகாரிகளுக்கு தகவல் தந்து என்னை மீட்க உதவி செய்தார்.

 என்னுடன் ஆறு பேர்கள் மீட்கப்பட்டாலும் இன்னும் அங்கு 3000 பெண்கள் அடிமைகளாக இருக்கின்றனர் என்றும் அவர்கள் நிர்வாணமாக சித்திரவதை செய்யப்படுகிறார்கள் என்றும் அவர்களை காப்பாற்ற நான் தூதரக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Siva

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு கலந்தது உறுதி.! ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!!

ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்பு.! செல்வப்பெருந்தகையை நீக்குக.! ராகுல் காந்திக்கு BSP கடிதம்..!

வேளாண் தொழில்நுட்பக் கல்லூரியில் ஸ்பெக்ட்ரா கூட்டரங்கத்தை முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்!

திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பா? சந்திரபாபு நாயுடு சத்தியம் செய்வாரா? ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் பதிலடி

இன்றிரவு 10 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments