Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெங்களூருவில் 3 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

Webdunia
செவ்வாய், 4 ஆகஸ்ட் 2015 (12:11 IST)
பெங்களூருவில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 3 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 
கர்நாட மாநிலம் பெங்களூரு இந்திரா நகர் பகுதியில் உள்ள, தனியார் பள்ளி ஒன்றில் 3 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.
 
இதனால், ஏற்பட்ட வலியினால் துடித்த அந்த சிறுமி, அருகாமையில் உள்ள அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
 
மருத்துவமனையில் அந்த சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும், மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதில், சிறுமி பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளானது தெரியவந்தது.
 
இதைத் தொடர்ந்து, இந்த கொடிய சம்பவத்தில் ஈடுபட்டவர் மீதும், அந்த தனியார் பள்ளி மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட குழந்தையின் பெற்றோர் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 
இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெல்லை ஜெயக்குமார் மரணம்.. கூடுதலாக 10 தனிப்படைகள்.. புதிய அதிகாரிகள் சேர்ப்பு..!

தொடர் சரிவில் பங்குச்சந்தை.. ஜூன் 4க்கு பின்னராவது உயருமா?

தங்கம் விலை இன்று திடீர் உயர்வு.. ஒரே நாளில் ரூ.560 உயர்ந்ததால் அதிர்ச்சி..!

மே 18-20.. 3 நாட்களுக்கு மிக கனமழை: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகை.. விஜய் பிறப்பித்த முக்கிய உத்தரவு..!