Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேலும் ஒரு நடிகைக்கு பாலியல் தொல்லை.. நடிகர் ஜெயசூர்யா மீது 2வது வழக்குப்பதிவு.!

Senthil Velan
வெள்ளி, 30 ஆகஸ்ட் 2024 (13:12 IST)
மேலும் ஒரு நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மலையாள நடிகர் ஜெயசூர்யா மீது 2வது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
 
திருவனந்தபுரத்தைச் சேர்ந்த நடிகை ஒருவர், இடுக்கி மாவட்டம் தொடுபுழாவில் உள்ள திரைப்பட தளத்தில், ஜெயசூர்யா தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் படி, படப்பிடிப்பில் கழிவறையை விட்டு வெளியேறியபோது நடிகையை ஜெயசூர்யா பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறியுள்ளார். இந்த சம்பவம் 2013ல் நடந்ததாக கூறப்படுகிறது.
 
இந்த புகாரை பெற்று கொண்ட திருவாடானை போலீசார், பதிவு செய்த வழக்கு தொடுபுழா போலீசாரிடம் விரைவில் ஒப்படைக்கப்படும் என்றும், கேரள போலீஸ் அகாடமி உதவி இயக்குனர் ஐஸ்வர்யா டோங்ரே ஐபிஎஸ் தலைமையிலான குழு இந்த வழக்கை விசாரிக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இது நடிகர் ஜெயசூர்யா மீது 2வது வழக்குப்பதிவு ஆகும்.


ALSO READ: ரூ.100 கோடி நில மோசடி வழக்கு..! மாஜி அமைச்சரின் சகோதரர் முன்ஜாமின் மனு தள்ளுபடி.!!
 
ஏற்கனவே, கொச்சியைச் சேர்ந்த நடிகை ஒருவரின் புகாரின் அடிப்படையில், திருவனந்தபுரம் கண்டோன்மென்ட் போலீஸார் அதே பிரிவுகளின் கீழ், கடந்த புதன்கிழமை ஜாமீனில் வெளிவர முடியாத வழக்குகளைப் பதிவு செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு கலந்தது உறுதி.! ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!!

ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்பு.! செல்வப்பெருந்தகையை நீக்குக.! ராகுல் காந்திக்கு BSP கடிதம்..!

வேளாண் தொழில்நுட்பக் கல்லூரியில் ஸ்பெக்ட்ரா கூட்டரங்கத்தை முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்!

திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பா? சந்திரபாபு நாயுடு சத்தியம் செய்வாரா? ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் பதிலடி

இன்றிரவு 10 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்