Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரண்டு வயது குழந்தை பலாத்காரம்?: அரை நிர்வாணமாக கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் கண்டெடுப்பு

இரண்டு வயது குழந்தை பலாத்காரம்?: அரை நிர்வாணமாக கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் கண்டெடுப்பு

Webdunia
திங்கள், 14 மார்ச் 2016 (13:38 IST)
பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் 2 வயது பெண் குழந்தை ஒன்று காணமல் போனதாக கூறப்பட்டது. அந்த குழந்தை நேற்று பஞ்சாப், லூதியானா ரயில்வே காலனியில் ஒரு பூட்டிய அறையில் அரை நிர்வாண நிலையில் தொண்டை நெரிக்கப்பட்டு கண்டெடுக்கப்பட்டார்.


 
 
பாதிக்கப்பட்ட அந்த குழந்தை உடனடியாக மாடல் டவுன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு கழுத்தில் சிகிச்சை அளிக்கப்படது. அவள் ஆபத்து நிலையை தாண்டிவிட்டார் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
 
அந்த குழந்தை ரயில்வே காலனியில் உள்ள தனது வீட்டின் வெளியே நண்பகலில் அதே பகுதியை சேர்ந்த ஒரு பையனுடன் விளையாடிக் கொண்டிருந்த போது காணமல் போனதாக பாதிக்கப்பட்ட குழந்தையின் தாய் கூறியுள்ளார்.
 
வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை காணவில்லை என்றதும், உடனடியாக தேட ஆரம்பித்தோம். அப்பொழுது குழந்தையின் கூட விளையாடிக் கொண்டிருந்த 14 வயது பையனையும் காணவில்லை.
 
குழந்தையை தேடிக்கொண்டிருந்த போது ஒரு வெளியே பூட்டிய அறையில் இருந்து சத்தம் கேட்டது. கதவை உடைத்து உள்ளே சென்ற போது குழந்தை அரை நிர்வாணமாக கழுத்து நெரிக்கப்பாட்டு இரத்தம் வடிந்த நிலையில் கிடந்தாள் என குழந்தையின் தந்தை கூறினார்.
 
உடனடியாக காவல் துறைக்கு தகவல் அளித்து விட்டு, மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு சென்றதாக அவர் கூறினார். 2 வயது சிறுமியுடன் விளையாடிக் கொண்டிருந்த அந்த 14 வயது பையனையும் சம்பவம் நடந்த நண்பகல் முதல் காணவில்லை. சிறுமியை அந்த 14 வயது சிறுவன் பலாத்காரம் செய்திருக்கலாம் என காவல் துறையினர் நடத்திய விசாரணையில் சந்தேகிக்கின்றனர்.

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

Show comments