Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹரியானாவில் தலித் குடும்பம் தீ வைப்பு எரிப்பு: 7 போலீசார் சஸ்பெண்ட் - 3 பேர் கைது

Webdunia
புதன், 21 அக்டோபர் 2015 (23:13 IST)
ஹரியானாவில் தலித் குடும்பத்தினரை பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட சம்பவத்தில் 7 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
 

 
ஹரியாணா மாநிலம், பரிதாபாத் மாவட்டம், பல்லாப்கரையை அடுத்த சன்பெட் கிராமத்தில் ஜிதேந்தர் என்ற தலித் குடும்பத்தைச் சேர்ந்த வீட்டில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்தனர். உயர் வகுப்பைச் சேர்ந்த சிலர் இந்த செயலில் ஈடுபட்டதும் தெரிய வந்துள்ளது.
 
இதில் அவரது இரண்டு குழந்தைகள் சம்பவ இடத்திலேயே தீயில் கருகி பலியானது. இந்த கொடூர சம்பவத்தில், அவரும், அவரது மனைவியும் படுகாயங்களுடன் உயிர் தப்பினர். அவர்களை, டெல்லி  மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
 
ஜிதேந்தர் வீட்டிற்கு பாதுகாப்பு அளிக்க ஏற்கனவே போலீசாருக்கு உத்தரவிட்டும், அவருக்கு போலீசார் உரிய பாதுகாப்பு அளிக்கவில்லை என்பதால் இதற்கு காரணமான 7 போலீசார் சஸ்பெண்ட்  செய்யப்பட்டனர்.
 
மேலும், தீ வைப்பு சம்பவத்தில் தொடர்புடை 3 பேரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான 8 பேரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். 
 

தொழிற்சாலை பாய்லர் வெடித்து தீ விபத்து: 10 பேர் பலி.. 48 பேர் காயம்..!

மனைவியை அபகரித்து சொத்தையும் கேட்ட கட்சி தலைவர்! ஆள் வைத்து கதை முடித்த காங். பிரமுகர்!

நடிகை கெளதமி சகோதரரும் ஏமாந்துவிட்டாரா? மோசடி செய்த ரியல் எஸ்டேட் நபர் மீது வழக்குப்பதிவு..!

பள்ளி மாணவர்களுக்கு முதல் நாளே பாடநூல்கள் விநியோகம்: பள்ளிக்கல்வித் உத்தரவு

தேர்தல் செலவுக்கு திரட்டிய நிதியில் வீடு கட்டும் கன்னையா குமார்.. இதுதான் புரட்சியா?

Show comments