Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நம்பி வந்த சிறுமி... ஐவருக்கு விருந்தாக்கிய நண்பன்: ஓங்கோலை உலுக்கிய ஓலம்

Webdunia
திங்கள், 24 ஜூன் 2019 (14:48 IST)
ஆந்திர மாநிலத்தில் 16 வயது சிறுமியை 6 பேர் 5 நாட்கள் கூட்டு பலாத்காரம் செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
ஆந்திர மாநிலம் ஓங்கோல் மாவட்டத்தில் 16 வயதான சிறுமி தனது நண்பனை நம்பி அவனது வீட்டிற்கு சென்றுள்ளாள். ஆனால், அங்கு அந்த சிறுமியின் நண்பன தனது வேறு சில 5 நண்பர்களோடு சிறுமியை பலாத்காரம் செய்துள்ளனர். 
 
சிறுமியை ஐந்து நாட்கள் ஒரு அறைக்குள் பூட்டி வைத்து சீரழித்துள்ளனர் அந்த 6 பேர். ஐந்து நாட்கள் நரகத்தில் இருந்து ஒருவழியாக அழுத்துக்கொண்டே தப்பிய சிறுமியை வழியில் காவல் அதிகாரி ஒருவர் கண்டு விசாரித்துள்ளார். 
அப்போது அந்த சிறுமி தனக்கு நடந்த கொடுமைகளை கூற சிறுமியை உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும் சிறுமி அளித்த புகாரின் அடிப்படையில் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளான். மீத 5 பேரை காவல் துறையினர் தேடி வருகின்றனர். 
 
இந்த கொடூர சம்பவம் ஆந்திர பகுதியில் கடும் அதிர்வலைகளை எழுப்பியுள்ளது. ஓங்கோல் எம்எல்ஏ பாலினெனி சீனிவாச ரெட்டி,  மாநில டிஜிபி கவுதம் சேவாக் ஆகியோர் இதற்கு கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

அடுத்த கட்டுரையில்
Show comments