Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேர்தல் பிரச்சாரம் முடிந்ததும் 144 தடை உத்தரவு: தெலங்கானாவில் பரபரப்பு!

Webdunia
புதன், 29 நவம்பர் 2023 (07:29 IST)
தெலுங்கானா மாநிலத்தில் நேற்று மாலை ஐந்து மணியுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடைந்த நிலையில் 144 தடை உத்தரவு அமலுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தெலுங்கானா மாநிலத்தில் நாளை மறுநாள் அதாவது நவம்பர் 30ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. மொத்தமுள்ள 120 தொகுதிகளில் 119 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளதை அடுத்து கடந்த சில வாரங்களாக அரசியல் கட்சிகள் விறுவிறுப்பாக தேர்தல் பிரச்சாரம் செய்தன

இம்மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் பிஆர்எஸ் ஆகிய இரு கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருவதாக தெரிகிறது. இரு கட்சிகளில் எந்த கட்சி வேண்டுமானாலும் ஆட்சியைப் பிடிக்க வாய்ப்பு இருப்பதாக கருத்துக் கணிப்புகள் வெளியாகி கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் நேற்று மாலை 5 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவுக்கு வந்த நிலையில் மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பொது வெளியில் நான்கு அல்லது அதற்கு  மேற்பட்ட நபர்கள் கூட கூடாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஹமாஸின் உச்ச தலைவர் யாஹ்யா சின்வாரை கொன்ற இஸ்ரேல்! - உறுதிப்படுத்திய நேதன்யாகு!

பாகிஸ்தான் ஆதரவு கோஷம்! ‘பாரத் மாதா கி ஜெய்’ சொல்லணும்! - நீதிமன்றம் கொடுத்த நூதன தண்டனை!

நடிகை கூறிய பாலியல் குற்றச்சாட்டு.. உடனே பதவியில் இருந்து விலகிய பாஜக பிரபலம்..!

டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விற்பனை கவுன்டர்கள்! குடிமகன்களுக்கு இனி காத்திருக்க வேண்டாம்..!

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் தொழிற்சாலைகளா? - அமைச்சர் டி.ஆர்.பி ராஜா விளக்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments