Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீட் தேர்வில் 11,000 மாணவர்கள் பூஜ்ஜியம் மதிப்பெண்! அதிர்ச்சி தகவல்..!

Siva
செவ்வாய், 23 ஜூலை 2024 (08:53 IST)
சமீபத்தில் நடந்த நீட் தேர்வில் 11 ஆயிரம் மாணவர்கள் ஒரு மதிப்பெண் கூட எடுக்காமல் பூஜ்ஜியம் மதிப்பெண் எடுத்திருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இளநிலை மருத்துவ படிப்பான எம்பிபிஎஸ் படிப்புக்கு நீட் தேர்வு கட்டாயம் என்று கடந்த சில வருடங்களாக கடைபிடிக்கப்பட்டு விவகாரம் நிலையில் இந்த நீட் தேர்வு குறித்து பல்வேறு சர்ச்சைகள் அவ்வப்போது எழுந்து வருகின்றன.

குறிப்பாக இந்த ஆண்டு நடந்த நீட் தேர்வில் பல முறைகேடுகள் நடந்ததாகவும் வினாத்தாள் கசிவு உட்பட முறைகேடுகள் குறித்து உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் உச்ச நீதிமன்ற உத்தரவுபடி தேசிய தேர்வு முகமை நீட் தேர்வு முடிவுகள் தேர்வு மையம் வாரியாக வெளியிட்டதில் 11 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் ஒரு மதிப்பெண் கூட எடுக்காமல் பூஜ்ஜியம் மற்றும் அதற்கு குறைவான நெகட்டிவ் மதிப்பெண்களை பெற்றுள்ளதாக தெரிகிறது. இதில்  மேலும் 9,400 பேர் மைனஸ் மதிப்பெண்களை பெற்றுள்ளனர். பீகாரில் உள்ள ஒரு தேர்வு மையத்தில் மிகவும் குறைந்தபட்சமாக ஒரு மாணவர் மைனஸ் 180 மதிப்பெண்களை பெற்றுள்ளார்.

நீட் தேர்வில் ஒரு கேள்விக்கு சரியான பதிலுக்கு நான்கு மதிப்பெண்கள், அதே நேரம் தவறான பதிலுக்கு ஒரு மதிப்பெண் குறைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. நீட் தேர்வு எழுதிய 11 ஆயிரம் மாணவர்கள் ஒரு மதிப்பெண் கூட எடுக்காமல் பூஜ்ஜியம் மதிப்பெண் எடுத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Siva
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு கலந்தது உறுதி.! ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!!

ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்பு.! செல்வப்பெருந்தகையை நீக்குக.! ராகுல் காந்திக்கு BSP கடிதம்..!

வேளாண் தொழில்நுட்பக் கல்லூரியில் ஸ்பெக்ட்ரா கூட்டரங்கத்தை முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்!

திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பா? சந்திரபாபு நாயுடு சத்தியம் செய்வாரா? ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் பதிலடி

இன்றிரவு 10 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments