Webdunia - Bharat's app for daily news and videos

Install App

10 வயது சிறுமி பலாத்காரம்: தலையில் கல்லை போட்டு கொலை!

Webdunia
வெள்ளி, 20 ஏப்ரல் 2018 (12:25 IST)
காஷ்மீர், உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 
 
ஆனால், சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்படுவது அதிக அளவில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இது போன்ற மேலும் ஒரு சம்பவம் சத்தீஸ்கரில் நடைபெற்றுள்ளது. 
 
கபீர்தாம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள 10 வயது சிறுமி தனது பெற்றோருடன் சென்றிருந்தார். 
 
அப்போது திருமணத்திற்கு வந்திருந்த மணமகனின் நண்பர், திருமண ஊர்வலம் நடந்து கொண்டிருந்த நேரத்தில் யாருக்கும் தெரியாமல் அந்த சிறுமியை கடத்தி சென்றுள்ளார். 
 
அதன் பிறகு அந்த கிராமத்தில் உள்ள வறண்ட ஆற்று பகுதியில் வைத்து சிறுமியை பலாத்காரம் செய்து, தலையில் கல்லை போட்டு கொலை செய்துள்ளார். பின்னர் சிறுமியின் உடலை அங்கேயே புதைத்துவிட்டார். 
 
சிறுமியை காணாது போலீஸில் புகார் அளிக்கப்பட்ட பின்னர், இந்த விவகாரம் வெளியே தெரிந்து, அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

"போகுமிடம் வெகு தூரமில்லை" திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!!

மாநகர ஆயுதப்படை மைதானத்தில் மரக்கன்றுகள் நடும் பணிகளை- மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார்..

திரவ நைட்ரஜன் பான் பீடாவை சாப்பிட்ட சிறுமி..! வயிற்றில் ஓட்டை விழுந்ததால் அதிர்ச்சி..!!

வழிப்பறி செய்த வழக்கில் இரண்டு அழகிகள் உட்பட ஆறு பேர் கைது!!

சட்டக் கல்லூரி மாணவி ஜிஷா கொலை வழக்கு : குற்றவாளிக்கு மரண தண்டனை அளித்து தீர்ப்பு!

அடுத்த கட்டுரையில்