Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பறக்கும் விமானத்தில் குழந்தை பெற்ற பெண்

Webdunia
புதன், 17 ஆகஸ்ட் 2016 (22:01 IST)
பறக்கும் விமானத்தில் பெண்ணுக்கு பிரசவம் ஆனதால், அந்த விமானம் ஐதராபாத் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.


 

 
துபாயில் இருந்து பிலிப்பைன்ஸ் நாட்டின் மணிலா நகரம் நோக்கி கடந்த 14-ம் தேதி சிபு பசிபிக் ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. அப்போது விமானம் இந்திய வான்பகுதியை நெருங்கிய நேரத்தில், பிலிப்பைன்ஸ் நாட்டின் பயணி, நிறைமாத கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. 
 
பின்னர் சிறிது நேரத்தில் அவருக்கு குழந்தையும் பிறந்தது. அதில் தாயின் உடல்நிலை மோசமாக இருந்ததால், அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க  உடனடியாக அருகில் இருந்த ஐதராபாத் விமான நிலையத்தில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
 
விமானம் தரையிறக்கப்பட்டதும், அந்த பெண்ணுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாக விமான நிலையத்தில் உள்ள ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

மாட்டிறைச்சியை செய்யுங்கள்...! விரும்பி சாப்பிடத் தயாராக இருக்கிறோம்..! அண்ணாமலைக்கு ஈவிகேஎஸ் பதிலடி!

கூகுள் நிறுவன அதிகாரிகள் சென்னை வருகை.. முதல்வர் ஸ்டாலினை சந்திக்க திட்டம்?

காவேரி கூக்குரல் இயக்கம் மூலம் தமிழ்நாட்டில் 1.21 கோடி மரங்கள் நட இலக்கு! - பொள்ளாச்சி திமுக எம்.பி. முதல் மரக்கன்றை நட்டு தொடங்கி வைத்தார்!

எங்களுக்கே இலவசம் இல்லையா.? அரசு பேருந்துகளுக்கு அபராதம் விதித்த போக்குவரத்து போலீசார்..!

இன்று வெளியாகும் Xiaomi Poco F6 மொபைல் என்னென்ன அம்சங்களில் வருது?.

அடுத்த கட்டுரையில்
Show comments