Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மங்கள்யான் விண்கலம் இன்னும் 33 நாட்களில் செவ்வாய் கிரகத்தை அடையும் - இஸ்ரோ

Webdunia
சனி, 23 ஆகஸ்ட் 2014 (15:25 IST)
செவ்வாய் கிரகத்திற்கு இந்தியா அனுப்பிய மங்கள்யான் விண்கலம் இன்னும் 33 நாட்களில் செவ்வாய் கிரகத்தை சென்றடையும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.
இந்தியா முதல் முதலாக செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பிய மங்கள்யான் விண்கலம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 5 ஆம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்பட்டது.
 
இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 24 ஆம் தேதி செவ்வாயை சென்றடையும் எனத் தெரிவிக்கப்பட்ட மங்கள்யான், இன்னும் 33 நாட்களில் செவ்வாயின் சுற்றுப்பாதையை சென்றடையும்  என இஸ்ரோ தெரிவித்துள்ளது.
 
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தியில், மங்கள்யான் விண்கலம் தற்போது செவ்வாய் கிரகத்தில் இருந்து 9 மில்லியன் கி.மீ தூரத்தில் இருப்பதாகவும், பூமியில் இருந்து 189 மில்லியன் கி.மீ தூரத்தில் இருப்பதாகவும், மங்கள்யான் இன்னும் 33 நாட்களில் செவ்வாயின் சுற்றுப்பாதையை சென்றடையும்  எனவும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகம் தெரிவித்துள்ளது. 
 

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

தயார் நிலையில் இருங்கள்..! மீனவர்களுக்கு கலெக்டர் போட்ட முக்கிய உத்தரவு..!!

சென்னையை பொருத்தவரை கோடைமழை ஒரு வரம்: தமிழ்நாடு வெதர்மேன்

என்னுடன் விவாதிக்க உறுதியாக வரமாட்டார்..! மோடியை சீண்டிய ராகுல் காந்தி.!!

Show comments