நாக்பூரில் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்ட தேசியவாத காங்கிரஸ் கட்சிதலைவர் சரத் பவார் நரேந்திர மோடியை 'அவசர மாப்பிள்ளை' என விமர்சித்துள்ளார்.
'பாஜகவின் பிரதமர் வேட்பாளரும், குஜராத் மாநிலத்தின் முதலமைச்சருமான நரேந்திர மோடி நாட்டின் பிரதமரானது போல் நடந்துக்கொள்கிறார்.
மக்கள் வாக்களித்து முடிவு தெரிவதற்கு முன்னரே மோடி, தான் பிரதமரானது போல நினைக்கிறார் என தெரிவித்த தேசியவாத காங்கிரஸ் கட்சிதலைவர் சரத் பவார் நரேந்திர மோடியை 'அவசர மாப்பிள்ளை' என விமர்சித்தார்.
நாக்பூரில் உள்ள சிக்லி பகுதியில் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்தில் சரத் பவாருடன் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் பங்கேற்றார்.