Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆந்திராவில் 29 வாக்குச்சாவடிகளுக்கு மறு தேர்தல்

Ilavarasan
ஞாயிறு, 11 மே 2014 (15:40 IST)
ஆந்திர பிரதேசத்தில் 29 வாக்குச்சாவடிகளில் மே 13 ஆம் தேதி மறுதேர்தல் நடைபெறும் என மாநில தலைமை தேர்தல் அதிகாரி பகன்வார்லால் தெரிவித்துள்ளார்.
 
தெலுங்கானாவில் 11 வாக்குச்சாவடிகளிலும், சீமாந்திராவில் 18 வாக்குச்சாவடிகளிலும் ஏப். 30 மற்றும் மே 7 ஆம் தேதி நடைபெற்ற தேர்தலின் போது முறைகேடுகள் தொடர்பாக புகார்கள் வந்ததால் மறுதேர்தல் நடைபெறுகிறது.
 
29 வாக்குச்சாவடிகலும் 13 லோக்சபா மற்றும் 21 சட்டசபை தொகுதிகளில் உள்ளது. பல வாக்குச்சாவடிகளில் அரசியல் கட்சிகள் மற்றும் போட்டியிடும் வேட்பாளர்களிடமிருந்து மாவட்ட கலெக்டர்களுக்கு புகார் வந்ததால் தேர்தல் ஆணையம் மறுதேர்தலுக்கு உத்தரவிட்டுள்ளது.
 
தெலுங்கானாவில் உள்ள 119 சட்டசபை மற்றும் 17 லோக்சபா தொகுதிகளுக்கு ஏப்ரல் 30 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. 2 ஆவது கட்டமாக சீமாந்திராவில் உள்ள 175 சட்டசபை மற்றும் 25 லோக்சபா தொகுதிகளுக்கும் மே 7 ஆம் தேதி நடைபெற்றது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

3-வது மாடியில் இருந்து தவறி விழுந்த பெண்..! நெஞ்சை பதற வைக்கும் வீடியோ..!!

மதுவிலக்கு துறை அமைச்சரை பதவி நீக்கம் செய்க.! கள்ள மௌனம் காக்கும் முதல்வர்..! அண்ணாமலை...

4 நகராட்சிகள் 20 நாட்களில் மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்படும்.! அமைச்சர் கே.என். நேரு அறிவிப்பு.!!

இதெல்லாம் சகஜம்தான்… ஐ வில் கம்பேக்- தீவிபத்தில் சிக்கிய சிறுவன் பேட்டி!

தனக்கு பிறந்ததா என சந்தேகம்.. 1 வயது குழந்தையை கொலை செய்த தந்தை.. அதிர்ச்சி சம்பவம்..!

Show comments