Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரயிலில் தள்ளி கொலை செய்யப்பட்ட மாணவியின் தந்தை உயிரிழப்பு!

Webdunia
வெள்ளி, 14 அக்டோபர் 2022 (07:51 IST)
நேற்று சென்னை பரங்கிமலையில் கல்லூரி மாணவி சத்யாவை ஒருதலையாக காதலித்த சதீஷ் என்பவர் கல்லூரி மாணவர், சத்யாவை ரயிலில் தள்ளி கொலை செய்தார். இந்த நிலையில் சத்யாவின் தந்தை நெஞ்சுவலியால் திடீரென உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் தனது மகள் சத்யா ரயிலில் தள்ளப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்ட சோகத்தில் அவரது தந்தை மாணிக்கம் என்பவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. இதனையடுத்து அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் 
 
இந்தநிலையில்ஒரே நேரத்தில் தந்தை மகள் என இருவரது இழப்பு அவரது குடும்பத்தினரை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் சத்யாவை ரயிலில் தள்ளிவிட்டு கொலை செய்த கல்லூரி மாணவன் சதீஷ் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
சதீஷை பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு இருந்த நிலையில் துரைப்பாக்கத்தில் சதீஷ் இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில் அங்கு சென்ற போலீசார் சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சண்முகபாண்டியன் நடிப்பில் ‘ரமணா 2’.. ஏஆர் முருகதாஸ் சூப்பர் தகவல்..!

கணவனாக மதிக்கப்படவில்லை. பொன் முட்டையிடும் வாத்தாக பார்த்தார்கள்: ரவி மோகன் ஆதங்கம்..!

பாடகி கெனிஷா என்னுடைய அழகான துணை.. ரவி மோகன் அறிக்கை..!

கருநிற மாடர்ன் உடையில் க்யூட் போஸ் கொடுத்த ரகுல் ப்ரீத் சிங்!

ஜொலிக்கும் சேலையில் மிளிரும் ஹன்சிகா… கார்ஜியஸ் போட்டோஷூட்!

அடுத்த கட்டுரையில்
Show comments