Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாதிக்காயின் மருத்துவ குணங்கள்

Webdunia
திங்கள், 6 ஆகஸ்ட் 2007 (12:26 IST)
சாதிக்காய் என்பதற்கு குலக்காய ், ஜாதிக்காய் அட்டம ், அட்டிகம் என்கின்ற வேறு பெயர்கள் இருக்கின்றன. சாதிக்காய்க்கு தாவரவியல் வழங்கும் பெயர் மைரிஸ்டிகா அஃபியனாலிஸ ் அல்லது மைரிஸ்டிகா ஃப்ராக்ரன்ஸ ் எனப்படும். இது ஒரு மர இனத்தை சேர்ந்தது. சாதிக்காய் பழத்தில் கொட்டையின் ஓட்டினுள்ளே இருக்கும் பருப்புதான் சாதிக்காய் என்று உபயோகிக்கப்படுகிறது. இதனை உணவு தயாரிப்பில் மணமூட்டும் பொருளாகவும் பயன்படுத்துகின்றனர். இதன் சுவை : துவர்ப்ப ு, தன்மை : வெப்பம்.

சாதிக்காய்க்கு சில நோய்களை தவிர்க்கும் இயற்கையான மருத்துவ குணங்கள் உள்ளன.

சாதிக்காய் உடலை வலிமையாக்கும்.

வாயுவினால் வயிறு உப்பசம ், வயிற்று வல ி, வயிற்றுப் பொருமல ், அசீரண மந்தம ், வாந்தி பேதியின் போது அதிக தாகம ், ஒற்றைத் தலைவல ி, மூச்சு இரைப்ப ு, இருமல ், கண் ஒளி மங்கல ், தூக்கமின்மை.

பெண்களுக்கு : மாத விலக்கின் போது வயிற்று வலி. அதிக உதிரப்போக்கு.

ஆண்களுக்கு : விந்துக் குறைவை போக்குகிறது.

சாதிக்காய் எண்ணெய்(தைலம்), பல்வல ி, வாத நோய் ஆகியவைகளுக்கு வெளி உபயோகத்திற்கு பயன்படுகிறது.

ஹோமியோபதி எனும் ஜெர்மனி மருத்துவத்தில் சாதிக்காயிலிருந்து வீரியப்படுத்தி (பொடன்சி) தயாரிக்கப்பட்ட மருந்தின் பெயர் நக்ஸ்மாஸ்சாடா எனப்படும் இம்மருந்து சில மன நோய்க்குறிகளுக்கும் சில நோய்களை குணப்படுத்த பயன்பட்டு வருகிறது.

மனக்குறிகள் : தோல்வியான சம்பவங்களாலும் அல்லது வேறு காரணங்களாலும் அதிக மன வேதனையால் மன நிலை பாதிப்பு (லிபோதைமியா).

நினைவாற்றல் குறைப்பாட்டிற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன.

1. புரதம ், மாவு சர்க்கரைப் பொருள் அடங்கிய க்ளைகோ ப்ரோட்டீன் என்னும் சத்துப்பொருள் மூளையில் குறைந்து இருப்பது. அதாவத ு, இந்தச் சத்துப் பொருள் மூளையின் வெளிப்பகுதியில் (செரிப்ரல் கார்டெக்ஸ ்), நரம்பு செல்களிலும் (நியூரான்), நரம்புகளிலும் நினைவுகளை அனுப்புவதில் ஊக்கமுடன் செயல்படச் செய்கிறது.

2. மூளையில் (தலைமிதழ்), ஒரு நரம்பிலிருந்து மற்றொரு நரம்பிற்கு (ஆக்ஸான ், டென்ட்ரான்) தகவல்கள் கடந்து செல்லும்போது (டிரான்ஸ்மிஷன்), இரண்டு நரம்புகளும் இணையும் இடத்தில் (சைனாப்ஸ ்) நினைவுகளின் உணர்ச்சி வேகம் (இம்பல்ஸ ்) தாமதமாக செயல்படுவதால் ஞாபகம் உடனே வருவதில்லை.

விபத்தினாலும் அல்லது சில மருந்து வகைகள் சாப்பிட்டதாலும ், கண்களில் கருவிழிக்கு (ஐரிஸ ்) நடுவில் இருக்கும் கண்மணி (பியூபில்) என்னும் உறுப்ப ு, அதிக அளவில் விரிந்திருக்கும் கண் நோய ், கண்மணியில் செயல்படும் தசைகள் (ஸ்பிங்டர் மஸில்) பாதிப்பினால் ஏற்படுகிறது.

மேற்கண்ட இரண்டு பாதிப்புகளுக்கும் (ஞாபக மறத ி, கண் நோய்) நக்ஸ்மாஸ்சாடா என்னும் மருந்து செயல்படுகிறது.

பெண்களுக்கு : சீரற்ற காலத்தில் கொஞ்சமாகவும ், அதிகமாகவும் மாறுதலாக வெளியாகும் மாதவிடாய்ப் போக்க ு, நீடித்திருக்கும் மாதவிடாய் (மெனோஸ்டேக்ஸிஸ ்) மாதவிடாய் வராத காலத்திலும் கருப்பையில் உதிரப்போக்க ு, இரத்தமுடன் வெள்ளைப்படுதல் (லியுகோரியா).

இதர நோய்க்குறிகள் :

வாத நோயில ், வலது இடுப்பிலிருந்த ு, வலது முழங்கால் மூட்டு வரை வல ி, குறிப்பாக மாடியில் ஏறும்போது அதிக வல ி, அசைவுகளால் வலி அதிகம ், நடப்பதற்கு தடுமாறுதல் (ஸ்டேகர்).

தொண்டை வறட்ச ி, வயிற்றில் அதிகக் காற்று சேர்ந்து வயிறு உப்புசமாகவும ், அசீரணக் கோளாறும் (டிஸ்பெப்சியா) இருக்கும்.

தூக்கமின்மையால் சில நோய் பாதிப்புகள ், தூங்கியவாறு சோம்பி இருத்தல ், உணர்வற்ற நிலையில் (கோமா/ஸ்டூபர்) இருத்தல்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காய்கறிகளை சமைக்காமல் உண்பாதால் கிடைக்கும் பலன்கள்..!

இளமையில் நரைமுடி பிரச்சனையா? இதோ ஒரு தீர்வு..!

ஆரோக்கியமான வாழ்விற்கு தினசரி செய்ய வேண்டிய முக்கிய விஷயஙகள்..!

உடலுக்கு புரதச்சத்து கொடுக்கும் பழங்கள் என்னென்ன?

டாய்லெட்டில் உட்கார்ந்து கொண்டு செல்போன் பார்த்தால் வரும் நோய்.. மருத்துவர்கள் எச்சரிக்கை..!

Show comments