இரண்டு எலும்புகள் சந்திக்கும் இடம்தான் மூட்டு எனப்படுகிறது. மூட்டுகள் எலும்புகளை இணைத்துப் பிடித்து, உறுதியான எலும்புக்கூடு நகர உதவுகிறது.
சிலருக்கு மூட்டுகளின் இடையே உள்ள ஆர்டிகுலர் கார்டிலேஜ் என்ற மென்மையான பரப்புகள் சீரற்றதாவதால், மூட்டுகள் எளிதாக இயங்குவதைப் பாதிக்கின்றன. இதனால் மூட்டுகளின் மென்மையான பலடங்கள் அதாவது மூட்டு ஜவ்வுகள் சேதமடைந்து, மூட்டின் இயல்பான இயக்கம் செயலற்று, அதன் விளைவாக மூட்டுகளில் வலி, பிடிப்பு, சிதைவுகள் ஏற்படுகின்றன.
மூட்டுகளின் வகைகள்
மனித உடலில் பலவகையான மூட்டுகள் உள்ளன.
அதாவது பந்து கிண்ண மூட்டு, இடுப்பு மற்றும் தோள் பட்டைகளில் உள்ளவை இந்த வகையாகும்.
முழங்கை, முழங்கால் முட்டிகள் மற்றும் விரல்களில் உள்ளவை மடங்கும் மூட்டுகள்.
கழுத்தின் முதல் இரண்டு எலும்புகளில் காணப்படுபவை மைய மூட்டுகள் ஆகும்.
நழுவும் மூட்டு வகையைச் சேர்ந்த¨ தான் கணுக்கால், மணிக்கட்டுப் பகுதிகளில் உள்ளவை. சாடில் எனப்படும் மூட்டு கையின் பெருவிரலில் உள்ளது.
மூட்டுகளில் ஏற்படும் பல்வேறு பிரச்சினைகளில் எலும்புத் தேய்மானம், மூட்டு வலி, ஆர்த்ரைடிஸ் போன்றவை குறிப்பிடத்தக்கவை.
இந்தியாவில் 150 மில்லியன் மக்கள் மூட்டு வலியினால் அவதிப்படுகிறார்கள். பொதுவாக 22 வயது முதல் 45 வயதுள்ளவர்களை இந்த மூட்டு வலி பாதிக்கிறது. இந்த நோய் தாக்கியவர்களுக்கு மூட்டுகளில் வலி, பிடிப்பு, வீக்கம் போன்றைவ ஏற்படுகிறது.
இதனை ஆரம்ப நிலையிலேயே சரியாக இனம் கண்டு அதற்கான நவீன முறை சிகிச்சைகளை மேற்கொள்வதன் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் மீண்டும் இயல்பான நிலைக்குத் திரும்ப முடியும்.
தற்போது மூட்டு மாற்று அறுவை சிகிச்சை வரை மருத்துவம் வளர்ந்துள்ளது. எனவே, மூட்டு வலியை கவனிக்காமல் விட்டுவிட்டு, பிறகு நடக்கவோ, நிற்கவோ முடியாமல் போகும் நிலையை அடைய வேண்டாம்.
உடனடியாக மருத்துவ சிகிச்சை பெறுவது ஒன்றே மூட்டுக்களை முடமாக்காமல் தடுக்கும் நடவடிக்கையாகும்.