Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கருணைக்கிழங்கில் கொத்சு செய்யலாமா?

Webdunia
வெள்ளி, 13 ஏப்ரல் 2012 (16:00 IST)
கருணைக்கிழங்கு என்ற ஒரு காயை நாம் அதிகம் பயனப்டுத்துவதில்லை, காரணம் அதில் மசியல் மட்டுமே செய்ய முடியும் என்பது இங்கு இருந்து வரும் பழக்கம். ஆனால் கருணைக் கிழங்கு கொத்சு செய்தால் பொங்கல் உட்பட பல்வேறு டிபன்களுக்கு தொட்டுக் கொள்ள ருசியாக இருக்கும்.

தேவை:

கருணைக் கிழங்கு 100 அல்லது 150 கிராம்
இஞ்சி சிறிது
புளி சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
பூண்டு - தேவையானால் 3 பல்
துவரம்பருப்பு - 2 மேஜைக்கரண்டி
சீரகம் 2 தேக்கரண்டி
சாம்பார் பொடி _ 2 தேக்கரண்டி
வெந்தயம் - 1 தேக்கரண்டி
வென்ங்காயம் - 5
மன்சள் தூள்.

செய்முறை:

கௌணைக்கிழங்கை தோலை நீக்கி வேகவைத்து நன்றாக மசிக்கவும். தனியாக துவரம்பருப்பு, சீரகம், வெந்தயம் ஆகியவற்றை வறுத்து தூளாக்கவும். பாத்திரத்தில் 3 கரண்டி எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம்பருப்புப் போட்டு நறுக்கின வெங்காயம், பூண்டு, இஞ்சி, கருவேப்பிலை போட்டு தாளிக்கவும். மசித்த கிழங்கை அதோடு சேர்த்து கிளறி, புளி கரைசலை ஊற்றி சாம்பார் பொடி, துள் செய்த பொடி, உப்பு, மஞ்சள் சேர்த்து சிறிது நேரம் கழித்து இறக்கி வைக்கவும்.

கருணைக்கிழங்கு கொத்சு ரெடி.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கேனில் அடைக்கப்பட்ட பானங்கள் குடித்தால் புற்றுநோய் வருமா? அதிர்ச்சி தகவல்

பாலூட்டும் தாய்மார்களுக்கு தேவையான முக்கிய ஊட்ட்சத்துக்கள் எவை எவை?

காதில் தொடர்ச்சியாக இரைச்சலா? என்ன செய்ய வேண்டும்?

தினமும் சிக்கன் சாப்பிட்டால் உடலுக்கு ஏற்படும் பிரச்சனைகள்: மருத்துவர்கள் எச்சரிக்கை..!

உணவில் வெண்ணெய் சேர்ப்பது உயிருக்கு ஆபத்தை உருவாக்குமா? அதிர்ச்சி தகவல்..!

Show comments