வாரம் முழுவதும் ஏற்றம்.. கடைசி நாளில் திடீரென சரிந்த பங்குச்சந்தை..!

Siva
வெள்ளி, 12 ஏப்ரல் 2024 (11:23 IST)
இந்திய பங்குச்சந்தை இந்த வாரம் முழுவதும் ஏற்றத்தில் இருந்த நிலையில் திடீரென இன்று பங்குச்சந்தை சரிந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. 
 
கடந்த சில நாட்களாக இந்திய பங்குச் சந்தை உயர்ந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். ஆனால் இன்று திடீரென மும்பை பங்குச்சந்தை 270 புள்ளிகள் சரிந்து 74 ஆயிரத்து 762 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது. 
 
அதேபோல் தேசிய பங்குச்சந்தையான நிப்டி 72 புள்ளிகள் சரிந்து 22 ஆயிரத்து 682 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. தேர்தல் நெருங்கும் வரை பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துடன் தான் இருக்கும் என்றும் புதிதாக யாரும் முதலீடு செய்ய வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
 
இந்த நிலையில் இன்றைய பங்குச் சந்தையில் ஏபிசி கேப்பிட்டல், கோல்ட் பீஸ், ஐடி பீஸ், கல்யாண் ஜூவல்லர்ஸ், மணப்புரம் கோல்டு ஆகிய பங்குகள் உயர்ந்துள்ளதாகவும் பேங்க் பீஸ், சிப்லா, ஐடிசி, கரூர் வைசியா வங்கி ஆகிய பங்குகள் குறைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அப்பாவை மதிக்காதவர் விஜய்!.. காணாம போயிடுவார்... பிடி செல்வகுமார் பேட்டி...

புதிய கட்சி தொடங்கிய ஆதவ் அர்ஜூனாவின் மைத்துனர்.. இலட்சிய ஜனநாயகக் கட்சி என்று பெயர் வைப்பு..!

நான் எப்படி இறந்தேன்? வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட நாம் தமிழர் வேட்பாளர் கேள்வி..!

கூலி வேலை செய்த இரு இளைஞர்கள்.. திடீரென அடித்த அதிர்ஷ்டம்.. இன்று லட்சாதிபதிகள்..!

மக்களவைக்குள் இ-சிகரெட் பயன்படுத்திய எம்பி.. கடும் எச்சரிக்கை விடுத்த சபாநாயகர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments