சப்பாத்திக்கு மாவு பிசைந்து குறைந்தது அரை மணி நேரமாவது ஊறிய பின்னரே சாப்பாத்தி திரட்ட வேண்டும்.
சப்பாத்தி திரட்டியதுமே தோசைக்கல்லில் போட்டு எடுக்க வேண்டும். சப்பாத்தியை திரட்டிய பின் அதிக நேரம் வைத்தால் வறண்டு விடும். முளைக் கட்டிய கொத்துக் கடலையை அரைத்து மாவுடன் சேர்த்து செய்யப்படும் சப்பாத்தி, பூரி மிகவும் சத்துள்ளதாகவும் சுவையாகவும் இருக்கும்.
சப்பாத்திக்கு மாவு பிசையும்போது நன்றாகக் கனிந்த இரண்டு வாழைப் பழங்களை சேர்த்து, சிறிது டால்டாவையும் ஊற்றிப் பிசைந்து சப்பாத்தி செய்தால் மிகவும் ருசியாகவும் மிருதுவாகவும் இருக்கும்.
உருளைக்கிழங்கை வேக வைத்து எந்த பதார்த்தம் செய்தாலும், அதனுடன் சிறிதளவு இஞ்சித் துண்டையோ, சுக்கையோ சேர்த்து வேக வைத்தால் வாய்வுத் தொந்தரவு ஏற்படாது. எளிதாகவும் ஜீரணமாகும்.
கோதுமை மாவில் கொஞ்சம் வேர்க்கடலை மாவைக் கலந்து பூரி, சப்பாத்தி செய்தால் ருசியாக இருப்பதுடன் உடலுக்கும் வலிமை தரும்.