எதிர்க்கட்சியே இல்லாமல் ஆட்சி அமைக்கும் மோடி – காங்கிரஸுக்கு அடிமேல் அடி!

Webdunia
வெள்ளி, 24 மே 2019 (13:22 IST)
மக்களவைத் தேர்தலில் 52 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ள  காங்கிரஸ் எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்துள்ளது.

17 ஆவது மக்களவைத் தேர்தலின் முடிவுகள் நேற்று வெளியாகின. தேசிய அளவில் பாஜக தனிப்பெரும்பாண்மையோடு ஆட்சி அமைக்கும் அளவுக்கு வெற்றியைப் பெற்று ஆட்சியைத் தக்க வைத்துள்ளது.  பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் 350 க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. இதனால் தனிபெரும்பாண்மையோடு ஆட்சி அமைக்க இருக்கிறது பாஜக. காங்கிரஸ் ஒட்டுமொத்தமாக 52 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.

ஆனால் எதிர்க்கட்சியாக பொறுப்பேற்பதற்கு குறைந்தபட்சம் 55 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். அதனால் தொடர்ந்து இரண்டாவது முறையாக காங்கிரஸ் எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்துள்ளது. இந்த தோல்வியை முழுமையாக ஒத்துக்கொண்டு ஏற்றுக்கொள்வதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். மேலும் ஜனநாயகத்தில் மக்களே எஜமானர்கள் என்றும் அவர்களின் தீர்ப்பை தலைவணங்கி ஏற்றுக்கொள்வதாக கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்கு திருட்டு மிகப்பெரிய தேச துரோகம்! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய 3ல் 2 பங்கு எம்பிக்கள் வேண்டும்.. இந்தியா கூட்டணிக்கு இருக்கிறதா?

திருப்பரங்குன்றம் தீபம்: தலைமைச் செயலாளர், ஏடிஜிபி டிச. 17ல் ஆஜராக உத்தரவு

மகாத்மா காந்தியின் படுகொலையை அடுத்து ஆர்.எஸ்.எஸ் அடுத்த திட்டம் இதுதான்: ராகுல் காந்தி

தம்பி விஜய் இதை தவிர்த்திருக்கலாம்! பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments