Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுகவில் ஒன்றிய செயலாளருக்கு வாய்ப்பு கொடுப்பார்களா..? பிரேமலதா கேள்வி..!

Senthil Velan
செவ்வாய், 2 ஏப்ரல் 2024 (19:17 IST)
தேர்தலில் போட்டியிட திமுகவில் அடிமட்ட தொண்டர்களுக்கு வாய்ப்பு கொடுப்பார்களா என்று பிரேமலதா விஜயகாந்த் கேள்வி எழுப்பி உள்ளார்.
 
ஆரணி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் கஜேந்திரன் அவர்களை ஆதரித்து தேமுதிக பொதுச்செயலாளர் திருமதி பரிமாறு தாவி விஜயகாந்த் பிரச்சாரம் மேற்கொண்டார்.
 
அப்போது பேசிய அவர், திமுகவில் குறுநில மன்னர்கள் உள்ளதாகவும், அவர்கள் தலைமையில் தான் எல்லாம் நடக்கும் என்றும் அடிமட்ட தொண்டர்களுக்கு திமுகவில் மரியாதை இல்லை என்றும் தெரிவித்தார். ஆனால் ஒன்றிய செயலாளர் முதல் தொண்டர்கள் வாய்ப்பு கொடுக்கும் ஒரே கட்சி அதிமுக என்று அவர் கூறினார்.
 
தேமுதிகவிலும் சாதாரண குடும்பத்தில் இருந்து வந்தவர்களுக்கு தான் தேர்தலில் போட்டியிட  வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளதாகவும், விருதுநகரில் மட்டும் தான் கேப்டனின் மகன் விஜய பிரபாகரன் போட்டியிடுவதாகவும் பிரேமலதா கூறினார்.
 
திமுகவில் ஒன்றிய செயலாளருக்கு வாய்ப்பு கொடுப்பார்களா என அவர் கேள்வி எழுப்பினார். 

ALSO READ: தொடரும் தேர்தல் அத்துமீறல்..! 3-வது முறையாக மன்சூர் அலிகான் மீது வழக்குப்பதிவு..!

அதிமுக தேமுதிக கூட்டணி மகத்தான கூட்டணி என்றும் ஆட்சி பலம் அதிகார பலத்தை வைத்து ஆளுங்கட்சியினர் கள்ள ஓட்டு போட்டு விடுவார்கள் என்றும் எனவே வருகிற 19ஆம் தேதி அனைவரும் தவறாமல் தேமுதிக அதிமுக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும்  என்றும் திருமதி பிரேமலதா கேட்டுக்கொண்டார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வனத்துறையிடம் ஒப்படைக்கப்படுகிறதா பழைய குற்றாலம்? தீவிர பரிசீலனையில் அரசு..!

வெளியானது நீட் மறு தேர்வு முடிவுகள்.. புதிய தரவரிசை பட்டியல் வெளியீடு.. எந்த இணையதளத்தில்?

எதிர்ப்பை மீறி புதிய குற்றவியல் சட்டங்கள் இன்று முதல் அமல்! வழக்கறிஞர்கள் போராட்டம்..!

முதுகலை, இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுவது எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்..!

கனமழையால் முக்கிய சாலையின் நடுவே திடீரென பெரிய பள்ளம்.. அகமதாபாத் நகரில் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments