மதிமுக சார்பில் திருச்சியில் போட்டியிடப் போவது யார்.? இவர்தான் வேட்பாளரா.? வைகோ அறிவிப்பு..!

Senthil Velan
திங்கள், 18 மார்ச் 2024 (15:54 IST)
நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் மதிமுக சார்பில் திருச்சி தொகுதியில் துரை வைகோ போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு திருச்சி மக்களவைத் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தொகுதி ஒதுக்கீடு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். 
 
இதனிடையே சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளுடன் வைகோ ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக கூட்டணியில் மதிமுக சார்பில் திருச்சி தொகுதியில் துரை வைகோ போட்டியிடுவார் என்று அறிவித்தார்.
 
நாடாளுமன்ற தேர்தலில் மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் கிடைத்தால் மகிழ்ச்சி என்றும் பம்பரம் சின்னம் கிடைக்கவில்லை என்றால் பொது சின்னத்தில் போட்டி என்றும் அவர் தெரிவித்தார்.

ALSO READ: மக்களை கவருமா திமுக தேர்தல் அறிக்கை.? மார்ச் 20-ல் வெளியாக வாய்ப்பு..?
 
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டால் சட்ட சிக்கல் என்பதால் பொதுச் சின்னத்தில் போட்டியிடுவதாக வைகோ விளக்கம் அளித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய்யை பார்க்க முண்டியடித்த தவெக தொண்டர்கள்.. காவல்துறை தடியடியால் பரபரப்பு..!

2026 தேர்தலில் தி.மு.க. துடைத்தெறியப்படும்: முதல்வர் ஸ்டாலினுக்கு அமித் ஷா சவால்!

விதிமுறைகளை மீறி தவெக தொண்டர்கள் செய்த அட்டகாசம்.. விரட்டிப் பிடிக்கும் காவலர்கள்

புதின் இந்திய வருகையால் டிரம்ப் ஆத்திரம்.. இந்திய அரிசுக்கு வரி விதிக்க திட்டமா?

2 நாளில் சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கும் மேல் சரிவு.. என்ன ஆச்சு இந்திய பங்குச்சந்தைக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments