Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்த நாட்டில் ஜனநாயகம் பிழைத்திருக்குமா? இல்லையா? என்ற கவலை எனக்கு வந்திருக்கிறது- ப.சிதம்பரம் பேச்சு!

J.Durai
செவ்வாய், 2 ஏப்ரல் 2024 (14:54 IST)
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கோட்டையூர் ஸ்ரீ ராம் நகரில் சிவகங்கை பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் கார்த்தி ப சிதம்பரத்தை ஆதரித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் பரப்புரை மேற்கொண்டார்.
 
அப்போது பேசிய அவர் கூறியது .. ....
 
ஒரே நாடு என்பதை ஏற்றுக் கொள்ள முடியும். ஆனால் ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது, வட மாநிலங்களையும், தென் மாநிலங்களையும் பிரித்திருப்பது கொள்கை போராட்டங்கள்தான் என்றும், தென்னாடுகள் என்பது வெறி பேச்சுக்கள்,கலவர பேச்சுக்கள் இல்லாத ஜனநாயக பூமி.
 
காமராஜர் கொண்டு வந்த மதிய உணவு திட்டத்தை போல், காலை சிற்றுண்டி உணவு திட்டத்தால் பல லட்சம் குழந்தைகள் உணவு அருந்துகிறார்கள், திமுகவின் மூன்று ஆண்டு கால ஆட்சியின் சாதனைகளை சொல்லி நான் உரிமையோடு கைச்சின்னத்திற்கு வாக்குகள் கேட்கிறேன்.
 
பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில், முதலமைச்சர்களை கைது செய்வது, அமைச்சர்களை கைது செய்வது என்பது சினிமாவில் கூட வந்தது கிடையாது, எந்த நாட்டிலும் இந்த விபரீதங்கள்,பயங்கரவாதங்கள் நடப்பதில்லை, அனைவருக்கும் கல்வி திட்டத்தை கொண்டு வந்தது காமராஜ் என்றும், கல்விக் கடன் திட்டத்தை கொண்டு வந்தது காங்கிரஸ் ஆட்சி என்று மார்தட்டி சொல்லுவோம் என்றும் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 தேர்தல்.. அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியலில் செங்கோட்டையன் பெயர் இல்லை.. என்ன காரணம்?

பாஜக அடி வாங்கும் போதெல்லாம் அதிமுக அடிமைகள் காப்பாற்றுகின்றன. திமுக எம்பி ஆவேசம்..!

சீமான் - விஜயலட்சுமி வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும் என்பது ஆணவத்தின் உச்சம்: ப சிதம்பரம்..

எறும்பு கடிச்சி சாவாங்களா? சினிமால கூட பாத்தது இல்ல! - திமுகவை வெளுத்த எடப்பாடி பழனிச்சாமி!

அடுத்த கட்டுரையில்
Show comments