Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேட்டது 3.. கொடுத்தது 2.. திமுக விசிக இடையே ஒப்பந்தம் கையெழுத்து..!!

Senthil Velan
வெள்ளி, 8 மார்ச் 2024 (13:44 IST)
மக்களவைத் தேர்தலில் திமுக விசிக இடையே தொகுதி பங்கீடு தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தானது. திமுக கூட்டணியில் விசிகவுக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
 
மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதற்கான பணிகளில் அனைத்து கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன.  திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறது.  கொமதேக, ஐயூஎம்எல், சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இன்று மதிமுகவுடன் ஒப்பந்தம் கையெழுத்தானது.
 
மக்களவை தேர்தலில் மூன்று தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று விசிக வலியுறுத்தி வந்தது. இதனால் பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வந்த நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு க ஸ்டாலினை, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் இன்று சந்தித்து பேசினார்.

திமுக கூட்டணியில் விசிகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்வதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். இதை அடுத்து முதல்வர் ஸ்டாலின், திருமாவளவன் இடையே தொகுதி பங்கீடு தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தானது. விசிகவுக்கு விழுப்புரம், சிதம்பரம் ஆகிய தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இந்த இரண்டு தொகுதிகளிலும் தனிச் சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

ALSO READ: தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரிப்பு..! எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்..!!
 
ஒரு பொது தொகுதி உட்பட 3 தொகுதிகள் ஒதுக்க வேண்டுமென திருமாவளவன் வலியுறுத்தி வந்த நிலையில், 2 தொகுதிகளை திமுக ஒதுக்கிருப்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கூட்டணி ஆட்சி என அமித்ஷா இனிமேல் சொன்னால் ஈபிஎஸ் முடிவு எப்படி இருக்கும்? பரபரப்பு தகவல்..!

யாருமே வழங்காத சலுகை.. ஒரு மாத ரீசார்ஜ் இவ்வளவு தான்.. பிஎஸ்என்எல் அதிரடி அறிவிப்பு..!

குலசாமின்னு சொல்லி குத்திவிட்டார்கள்! அன்புமணியை விரட்டிவிட நான் என்ன முட்டாளா? - ராமதாஸ் வேதனை!

ஓ நண்பனே.. எலான் மஸ்க் மன்னிப்பை ஏற்ற ட்ரம்ப்! மீண்டும் இணைந்த கைகள்?

விஜய் கட்சியுடன் கூட்டணி பேச்சுவார்த்தையா? டாக்டர் ராமதாஸ் விளக்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments