தேர்தல் பாதுகாப்பு பணிக்காக துணை ராணுவ படையினர் சிறப்பு ரயில் மூலம் திருச்சி வந்தனர் . திருச்சியில் இருந்து 8 மாவட்டங்களுக்கு பாதுகாப்பு பணிக்கு உடமைகளை எடுத்துச் சென்றனர்

J.Durai
புதன், 3 ஏப்ரல் 2024 (13:11 IST)
தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவை தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. தேர்தலை முன்னிட்டு அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
தேர்தல் பிரச்சாரத்தில் முறைகேடுகள் உள்ளிட்டவற்றை தடுப்பதற்காகவும் அவற்றை கண்காணிப்பதற்காகவும் தேர்தல் பறக்கும் படையினர் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
 
இந்த நிலையில் தேர்தலுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் சென்னையிலிருந்து சிறப்பு ரயில் மூலம்  8 கம்பெனி துணை ராணுவ படையினர் ரயில் மூலம் திருச்சி வந்தனர்.
 
திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் வந்த துணை ராணுவ படையினரை தமிழ்நாடு சிறப்பு காவல் படை முதலாம் அணி தளவாய் ராஜசேகரன் தலைமையில், தமிழ்நாடு சிறப்பு காவல் படை முதலாம் அணி துணை தளவாய் திருமதி.கிரிஜா ஆகியோர் பூங்கோத்து கொடுத்து வரவேற்றனர்.
 
ஒரு கம்பெனியில் 90 பேர் வீதம் 8 கம்பெனி துணை ராணுவ படையினர் திருச்சி வந்தனர். 
 
திருச்சியில் இருந்து அவர்கள் திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், பெரம்பலூர், அரியலூர், நாகப்பட்டினம், கரூர், திருவாரூர் ஆகிய 8 மாவட்டங்களுக்கு தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்காக செல்கின்றனர். 8 கம்பெனி துணை ராணுவ படையினர் வந்த நிலையில்  11 கம்பெனி துணை ராணுவ படையினர் வர உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்கு திருட்டு மிகப்பெரிய தேச துரோகம்! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய 3ல் 2 பங்கு எம்பிக்கள் வேண்டும்.. இந்தியா கூட்டணிக்கு இருக்கிறதா?

திருப்பரங்குன்றம் தீபம்: தலைமைச் செயலாளர், ஏடிஜிபி டிச. 17ல் ஆஜராக உத்தரவு

மகாத்மா காந்தியின் படுகொலையை அடுத்து ஆர்.எஸ்.எஸ் அடுத்த திட்டம் இதுதான்: ராகுல் காந்தி

தம்பி விஜய் இதை தவிர்த்திருக்கலாம்! பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments