Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான் ஒன்னும் அவ்ளோ வொர்த் பீஸ் இல்ல... சரண்டரான ஓபிஎஸ்

Webdunia
செவ்வாய், 9 ஏப்ரல் 2019 (15:10 IST)
தேர்தல் நெருங்கியுள்ளதால், வெயிலின் அனலோடு, அனல் பறக்கும் பிரச்சாரங்களை அரசியல் கட்சி தலைவர்கள் மேற்கொண்டு வருகின்றனர். 
அந்த வகையில் ராமநாதபுரம் மக்களவை வேட்பாளர் நயினார் நாகேந்திரனை ஆதரித்து துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பிரச்சாரத்தில் ஈடுப்பட்டார். எந்த கொம்பனாலும் அதிமுகவை ஆட்டவோ, அசைக்கவோ முடியாது என அதிமுகவின் பெருமைகளையும் அதிமுக செய்த சாதனைகளை மூச்சு விடாமல் பேசிக் கொண்டிருந்தார்.
 
அப்போது, கூட்டத்தில் இருந்த சிலர் ஜல்லிக்கட்டு நாயகனே என கோஷமிடத்துவங்கினர். இதை கேட்டதும், ஓபிஎஸ் தொண்டர்களை பார்த்து, நீங்கள் ஜல்லிக்கட்டு நாயகனே என சொல்லிவிட்டு சென்று விடுவீர்கள். 
 
அதன் பிறகு நான் எங்காவது ஜல்லிக்டட்டி துவங்கி வைக்க செல்லும் போது என்னை காளையை அடக்க சொன்னா, என் நிலைமை என்னவாகும் என கலகலப்பாக பதில் அளித்தார்.  ஓ.பன்னீர் செல்வம் முதல்வராக இருந்த சமயத்தில்தான், ஜல்லிக்கட்டுக்கான போராட்டம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

விஜயின் த.வெ.க மாநாட்டில் பங்கேற்பீர்களா.? சீமான் சொன்ன பளீச் பதில்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments