Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இளம் இயக்குநர் மீது கடுப்பில் இருக்கும் நடிகை

Webdunia
சனி, 3 ஜூன் 2017 (18:32 IST)
பிரமாண்ட படத்தில் இருந்து விலக இளம் இயக்குநர் தான் காரணம் என்பதால், அவர்மீது கடுப்பில் இருக்கிறாராம் நடிகை.


 

கோடிகளைக் குவித்த பிரமாண்ட சரித்திரப் படத்தைப் பார்த்து, தானும் அதேபோல் ஒரு படத்தை எடுக்க விரும்பினார் பூ நடிகையின் கணவர். பாம்புக்குப் பால் வார்த்த நிறுவனம், 300 கோடியில் தயாரிக்க ஓகே சொன்னது. அந்தா… இந்தாவென்று கேன்ஸ் திரைப்பட விழாவில் அறிமுகம் கூட செய்து விட்டார்கள். ஆனால், அடுத்தகட்டத்துக்கு படம் எப்போது நகரும் என்பது கேள்விக்குறியாகி உள்ளது.

காரணம், இந்தப் படத்தைத் தயாரிக்கும் நிறுவனம்தான், இளைய தளபதியை வைத்து இளம் இயக்குநர் எடுக்கும் படத்தையும் தயாரிக்கிறது. ஆனால், போட்ட பட்ஜெட்டைவிட எக்கச்சக்கமாக பில் வந்துவிட்டதாம். இதில், சென்னையில் வேறு ஒரு ஷெட்யூல் பாக்கியிருக்கிறது. எனவே, பிரமாண்ட படத்துக்கு வைத்திருந்த காசைத்தூக்கி தளபதி படத்தில் போட்டுவிட்டார்களாம்.

இதனால், பிரமாண்ட படம் எப்போது தொடங்கும் என்பது சிதம்பர ரகசியமாகவே இருக்கிறது. எனவேதான், கால்ஷீட்டை வீணாக்க வேண்டாமென படத்தில் இருந்து விலகினாராம் நடிகை. இதற்காக, பயிற்சியாளரை வைத்து வாள் சண்டையெல்லாம் கற்றவரல்லவா? அவர் கோபப்படுவதிலும் நியாயம் இருக்கத்தானே செய்யும்?
 

என்னை நிராகரிச்சிட்டு நீங்க படம் பண்ணவே முடியாது!.. எம்.ஜி.ஆருக்கு சவால் விட்ட வாலி!.

ரகுல் ப்ரீத் சிங்கின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோ ஆல்பம்!

மாடர்ன் ட்ரஸ்ஸில் க்ரீத்தி ஷெட்டியின் கலக்கல் ஆல்பம்!

யாஷிகா ஆனந்தின் கிளாமரஸ் போட்டோஷூட் ஆல்பம்!

விஜயகாந்த் மகனுக்காக விஜய் செய்யப் போகும் உதவி… ஒரே கல்லுல ரெண்டு மாங்கா!

அடுத்த கட்டுரையில்
Show comments