Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உளுந்தூர்பேட்டை தொகுதியில் விஜயகாந்த் வேட்பு மனு தாக்கல்

Webdunia
புதன், 27 ஏப்ரல் 2016 (14:24 IST)
உளுந்தூர்பேட்டை தொகுதியில் போட்டியிட உள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த்  இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.


 

 
2006ஆம் ஆண்டு விஜயகாந்த் விருத்தாச்சலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன்பின் 2011ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில், அதிமுகவின் கூட்டணி வேட்பாளராக ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
 
வருகிற 16ஆம் தேதி நடைபெறவுள்ள சட்ட மன்ற தேர்தலில் அவர் உளுந்தூர் பேட்டை தொகுதியில் போட்டியிடுகிறார். அதற்கான வேட்புமனுவை இன்று மதியம் 1.30 மணிக்கு அவர் தாக்கல் செய்தார்.
 
அவருடன் அவருடைய மனைவி, மைத்துனர் சுதீஷ் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஆகியோர் உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்திருந்தனர். தேர்தல் அலுவலரான முகுந்தனிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சரிவு.. இன்று ஒரே நாளில் இவ்வளவா?

தயிர் வியாபாரியிடம் பணம் பறித்த விவகாரம்: சிறப்பு உதவி ஆய்வாளர் கைது..!

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments