ஜியோ, வோடபோன், பி.எஸ்.என்.எல் நெட்வொர்க்கால் முடியாததை முடித்த ஏர்டெல்!

Webdunia
வியாழன், 31 மார்ச் 2022 (17:31 IST)
ஜியோ நிறுவனம் கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும் 93.32 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளது. 
Airtel

 
இந்தியாவில் மொபைல் நெட்வொர்க் சேவைகளில் அதிகமான மக்களால் பயன்படுத்தப்படும் நெட்வொர்க்குகளாக ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஆகிய நிறுவனங்கள் உள்ளன. சமீபத்தில் ஏர்டெல், வோடபோன், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனங்கள் அடுத்தடுத்து தங்களது ரீசார்ஜ் ப்ளான்களின் கட்டணத்தை 20 முதல் 25% வரை உயர்த்தின.
 
இது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தற்போது ஜியோ நிறுவனம் கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும் 93.32 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளது. இத்துடன் வோடஃபோன் நிறுவனம் 3.89 லட்சம் வாடிக்கையாளர்களையும், பி.எஸ்.என்.எல் 3.77 லட்சம் வாடிக்கையாளர்களையும் இழந்துள்ளன.
 
இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஏர்டெல் மட்டும் புதிதாக 7.14 லட்சம் புதிய வாடிக்கையாளர்களை கடந்த ஜனவரி மாதம் பெற்றுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எந்த ஷா வந்தாலென்ன? கருப்பு சிவப்பு படை தக்க பாடம் புகட்டும்! முதல்வர் ஸ்டாலின்

ஆசைக்கு அளவில்லை என்பதற்கு அடையாளம் விஜய்”: த.வெ.க. தலைவரை விமர்சித்த அமைச்சர் கோவி. செழியன்

விஜய் போட்டாவ வச்சி என் பொண்ணு வாழ்க்கையே போச்சி!.. அட பாவமே!...

இட்லி, வடை, தோசை சாப்பிடுவது போன்ற ஒரு சாதாரண சந்திப்பு.. விஜய் சந்திப்பு குறித்து பிரவீன் சக்கரவர்த்தி

உபியில் 2.45 கோடி வாக்காளர் படிவங்கள் திரும்ப வரவில்லை.. SIRஆல் பாஜகவுக்கு சிக்கலா?

அடுத்த கட்டுரையில்
Show comments