Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இதுக்கு பேரு சமூக வலைதளமா? – டிக்டாக்கை விமர்சித்த ஸுகர்பெர்க்

Webdunia
சனி, 19 அக்டோபர் 2019 (18:03 IST)
சமூக பிரச்சினைகளை பேச முடியாத ஒரு செயலியை சமூக வலைதளமாக நினைக்க முடியுமா என பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸுகர்பெர்க் கேள்வி எழுப்பியுள்ளார்.

உலகம் முழுவதிலும் சமூக செயலிகள் எனப்படும் அப்ளிகேசன்கள் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அவற்றில் ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸப் போன்றவை மிக முக்கியமான செயலிகள். வெறும் கேளிக்கையை மட்டுமே நோக்கமாக செயல்படாமல் பல்வேறு சமூக கருத்துக்களையும், போராட்டங்களையும் வெளிப்படுத்தவும் இந்த சமூக செயலிகள் பயன்படுகின்றன.

சமீபத்தில் பேசிய பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸுகர்பெர்க் “சமூக வலைதளங்கள் பல்வேறு சமூக மாற்றங்களுக்கும் காரணமாய் அமைந்துள்ளது. ஆனால் டிக்டாக் போன்ற செயலிகள் முழுக்க சீன அரசுக்கு கைக்கூலியாக செயல்பட்டு வருகின்றன. சீன நிறுவனமான டிக்டாக் சென்சார் முறையை பின்பற்றி வருகிறது. அரசுக்கு எதிரான சீனாவுக்கு எதிரான எந்த பதிவையும் அதில் பார்க்க முடியாது. உலகின் மிகப்பெரும் போராட்டமான ஹாங்காங் போராட்டம் குறித்து கூட டிக்டாக்கில் எந்த வீடியோவும் இருக்காது.

இவை சமூக வலைதளங்களே கிடையாது. இதுபோன்ற சேவை நமக்கு தேவையா. வாட்ஸப்பில் இதுப்போன்ற சென்சார் முறைகள் எதுவும் பின்பற்றப்படவில்லை” என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

39 ஆண்டுகளுக்குப் பிறகு“கல்கி 2898 கி.பி” திரைப்படத்தில் இணைந்த 2 ஜாம்பவான்கள்!

கணவரை இழந்து ஆன்லைன் வாடகை இரு சக்கர வாகனம் ஓட்டும் பணி செய்துவரும் பெண்களுக்கு 15-லட்சம் மதிப்புள்ள பேட்டரி வாகனம்

மேலும் ஒருவர் பலி.. கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய பலி 62 ஆக அதிகரிப்பு ..!

போதைப் பொருள் விழிப்புணர்வு பேரணி!

ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய புதிய கட்டுப்பாடா..? ஐஆர்சிடிசி விளக்கம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments