Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒடுக்கப்பட்ட இனத்தவருக்கு கூகுள் எப்போதும் துணை நிற்கும் - சுந்தர் பிச்சை

Webdunia
செவ்வாய், 2 ஜூன் 2020 (21:23 IST)
கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, இன சமத்துவத்திற்கு எப்போதும் கூகுள் துணை நிற்கும் என தெரிவித்துள்ளார்.

சில நாட்களுக்கு முன் அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்தில் கருப்பினத்தவர் ஒருவரை போலீஸார் கைது செய்த போது இறந்த நிலையில் போலீஸாருக்கு எதிரான போரட்டங்கள் அமெரிக்காவின் பல மாகாணங்களில் வெடித்துள்ளது.

இதை தொடர்ந்து போலீஸ் காவல்துறையுடனான ஒப்பந்தங்களை ரத்து செய்துள்ளது மினசோட்டா பல்கலைகழகம். தொடர்ந்து இரண்டு நாட்களாக போராட்டம் நடத்தி வருபவர்களுக்கும், காவலர்களுக்கும் இடையே கைகலப்பும் ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில்,நாள்தோறும் கறுப்பின மக்களுக்கு ஆதரவாக அமெரிக்காவில் வலுத்து வரும் போராட்டத்தால் அங்கு இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, சமூக வலைதளங்களான கூகுள்,யுடியூப் ஆகியவை இன சமத்துவத்திற்கு துணைநிற்கும் என  தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments