Webdunia - Bharat's app for daily news and videos

Install App

5 கோடி பேஸ்புக் தகவல்கள் திருட்டு - அதில் நீங்களும் இருக்கலாம்

Webdunia
சனி, 29 செப்டம்பர் 2018 (12:57 IST)
முகநூல் பக்கத்தில் உள்ள 5 கோடி பேரின் தகவல்கள் திருடப்பட்டுள்ளதாகவும், 4 கோடி பேரின் தகவல்கள் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாகவும் முகநூல் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

 
சமூகவலைத்தளங்களில் பலரும் பயனபடுத்தும் முகநூலை அடிக்கடி ஹேக்கர்ஸ் கையில் சிக்கி தவித்து வருகிறது. ஏற்கனவே அமெரிக்க தேர்தலின் போது அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தை சேர்ந்த பலரின் தகவல்கள் திருடப்பட்டதாக எழுந்த செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
 
இந்நிலையில், தற்போது மேலும் 5 கோடி பேரின் தகவல் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக முகநூல் அதிர்ச்சி செய்தியை வெளியிட்டுள்ளது. அதோடு, 4 கோடி பேரின் முகநூல் தகவல்கள் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
முகநூலில் உள்ள சிறப்பு அம்சமான வியூ ஆஸ் (View As) வசதியை பயன்படுத்தி ஹேக்கர்ஸ் தகவல்களை திருடியுள்ளது கண்டிபிடிக்கப்பட்டு, தற்போது அதை சரி செய்யும் பணியில் முகநூல் நிறுவனம் மும்முரமாக ஈடுபட்டுள்ளதாக அந்நிறுவனத்தின் தயாரிப்பு மேலாண்மை துறை துணை தலைவர் கய் ரோஷன் தனது முகநூல் பக்கத்தில் கூறியுள்ளார்.
இந்த செய்தி முகநூல் பயன்படுத்தும் பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

ஒரே நாளில் தமிழகம் வரும் பிரதமர் மோடி மற்றும் அமைச்சர் அமித்ஷா.. என்ன காரணம்?

தங்கையிடம் அத்துமீறிய 17 வயது இளைஞன்.. தட்டிக்கேட்ட 13 வயது சிறுவன் கொடூர கொலை!

குமரியில் பிரதமர் மோடி இரவு பகலாகக் தியானம் - பிரதமர் அலுவலகம் தகவல்..!

இந்தியாவில் விற்பனைக்கு வந்தது சாம்சங் கேலக்சி F55..! அதிரடி விலை.!!

பழநி முருகன் கோயிலில் மே 30ஆம் தேதி ரோப் கார் சேவை நிறுத்தம்! என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments