Webdunia - Bharat's app for daily news and videos

Install App

AIRTEL, BSNL - வாடிக்கையாளர்களுக்கு ஆஃபர்... நிறுவனங்கள் அதிரடி !!

Webdunia
செவ்வாய், 31 மார்ச் 2020 (15:00 IST)
கொரோனாவால் உலக நாடுகளில் பொருளாதாரம் ஸ்தபித்துள்ளது. இந்தியாவில், ஏப்ரல் 14 ஆம் தேதிவரை ஊரடங்கு உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கொரோனாவால் குறைந்த வருமானம் பெறுவோருக்கு உதவுவதற்காக தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஏர்டெல், பி.எஸ்.என்.எல். நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

இதுகுறித்து ஏர்டெல் தலைமை அதிகாரி சஷ்வந்த் சர்மா கூறியதாவது, கொரோனாவால் வருமானம் இலலாமல் தவித்துவரும் மக்களுக்கும், குறைந்த வருமானம் பெறுவோருக்கு உதவும் வகயைில், 8 கோடி ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு, ப்ரீபெய்டு பேக் முடவடைகின்ற  காலத்தை வரும்  ஏப்ரல் 17 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம்  இன்கம்மிங் கால்  அழைப்புகளை தடையின்றி அவர்கள் பெறமுடியும் என் என தெரிவித்துள்ளது.

இதில்,, ப்ரிபெய்டு வாடிக்கையாளர் எண்களுக்கு 10 ரூபாய் டாக் டைம் வழங்கப்படுவதாகவும்,  இதனை அவசர அழைப்புகள், குறுஞ்செய்திக்கு பயன்படுத்திக் கொள்ள முடியும் என்று தெரிவித்தார்.

அதேபோல் மத்திய அரசு நிறுவனமான பி.எஸ்.என்.எல். தனது வாடிக்கையாளர்களுக்கு  உதவும் வகையில், ப்ரீ பெய்டு காலத்தை வரும் ஏப்ரல் 20 ஆம்தேதி வரை நீட்டித்துள்ளது. மேலும்  அதன் வாடிக்கையாளர்களின் எண்களுக்கு 10 ரூபாய் டாக்டைம் சேர்க்கபடுவதாக அறிவித்துள்ளது. அத்துடன், அவசர அழைப்புகள், குறுஞ்செய்திகளுக்கு இதனை பயன்படுத்தி கொள்ளலாம் என பி.எஸ்.என்.எல். நிறுவனம் கூறியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments