டெலிகிராமுக்கு தாவிய 5 கோடி பேர்! – வயிற்றெரிச்சலில் வாட்ஸப்!

Webdunia
புதன், 13 ஜனவரி 2021 (15:58 IST)
வாட்ஸப் நிறுவனத்தின் புதிய தனிநபர் கொள்கை சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் டெலிகிராம் இன்ஸ்டால் செய்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

உலகம் முழுவதும் தகவல் தொடர்புக்கு அதிகமாக பயன்படுத்தும் செயலிகளில் வாட்ஸப் முக்கியமானதாக உள்ளது. 5 பில்லியனுக்கும் அதிகமான பயனாளர்களை கொண்ட வாட்ஸப் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட தனிநபர் நிபந்தனைகள் மற்றும் கொள்கைகள் உலகம் முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. இந்த புதிய கொள்கைகளால் தனிநபர் தகவல்களை வாட்ஸப் பிற நிறுவனங்களோடு பகிர்ந்து கொள்ளும் அபாயம் உள்ளதாக கூறப்பட்டது.

இதை தொடர்ந்து வாட்ஸப்பு எதிர்ப்புகள் உருவாக தொடங்கியுள்ள நிலையில் உலகம் முழுவதும் மக்கள் வாட்ஸப்புக்கு பதிலாக சிக்னல், டெலிகிராம் உள்ளிட்டவற்றை பயன்படுத்த தொடங்கியுள்ளனர். இதனால் இதுவரை 2.5 கோடி பேர் மட்டுமே பயன்படுத்தி வந்த டெலிகிராம் செயலியை கடந்த 72 மணி நேரத்தில் மேலும் 2.5 கோடி பேர் தரவிறக்கம் செய்து பயன்படுத்த தொடங்கியுள்ளனர். தங்களது புதிய கொள்கைகள் தனிநபர் தகவல்களை பகிராது என வாட்ஸப் விளக்கம் அளித்தும் பிற செயலிகளுக்கு மக்கள் வேகமாக தாவி வருவதால் விழி பிதுங்கி நிற்கிறதாம் வாட்ஸப் நிறுவனம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஃபுல்லா முள்வேலி!.. ஒருத்தனும் ஏற முடியாது!.. ஈரோடு தவெக பொதுக்கூட்ட அப்டேட்!...

சர்வேலாம் சும்மா!.. தளபதியை ஏமாத்துறாங்க!.. புலம்பும் தவெக நிர்வாகிகள்!....

பாதை மாறி சென்ற ரேபிடோ பைக் ஓட்டுனர்.. பைக்கில் இருந்து குதித்து தப்பிய இளம்பெண்..!

சாமிய ஊர்வலம் கொண்டு போய் கோவிலுக்குள்ள வைக்கணும்!.. விஜயை கொண்டாடும் ஈரோடு தவெக நிர்வாகிகள்..

டெல்லியில் மெஸ்ஸி.. விராத் கோஹ்லியுடன் கால்பந்து விளையாடுகிறாரா? மோடி, அமித்ஷாவுடன் சந்திப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments