Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஏப்ரல் 12 முதல் 25ஆம் தேதி வரை கொல்கத்தாவில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறாது

ஏப்ரல் 12 முதல் 25ஆம் தேதி வரை கொல்கத்தாவில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறாது
, புதன், 1 ஏப்ரல் 2015 (12:21 IST)
கொல்கத்தாவில் நகராட்சி தேர்தல் நடைபெறுவதால், ஐபிஎல் போட்டிகள் நடைபெறவிருந்த தேதி அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
 
வருகின்ற ஏப்ரல் 8ஆம் தேதி புதன்கிழமை கொல்கத்தாவில் ஈடன் கார்டன் மைதானத்தில் ஐபிஎல் போட்டிகள் துவங்குகின்றன. இதன் முதல் போட்டியில் ‘நடப்பு சாம்பியன்’ கொல்கத்தா மற்றும் மும்பை அணிகள் மோதுகின்றன.
 

 
மேலும் வருகின்றா ஏப்ரல் 18ஆம் தேதி கொல்கத்தா மாநில நகராட்சி தேர்தலும் நடைபெறவிருக்கிறது. இதனால், ஐபிஎல் போட்டிகளுக்கு பாதுகாப்பு தருவதில் சிக்கல் ஏற்படும் என்றும், இதனால் போட்டிகளை வேறு தேதிகளில் மாற்றிக் கொள்ளுங்கள் என்றும் மாநில காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
 
இது குறித்து பிசிசிஐ-யின் செயலாளர் அனுராக் தாகூர் கூறுகையில், ‘‘வருகின்ற ஏப்ரல் 12 முதல் 25 வரை ஈடன் கார்டனில் எந்த போட்டிகளும் நடக்காது. கொல்கத்தா அணி பங்கேற்கும் 3 போட்டிக்கான தேதிகள் மற்றும் நேரங்கள் மாற்றப்படுகின்றன’’ என்று தெரிவித்துள்ளார்.
 
இதன் விவரம்:
 
ஏப்ரல் 14ஆம் தேதி நடைபெற இருந்த சென்னை – கொல்கத்தா போட்டி, ஏப்ரல் 30, இரவு 8 மணிக்கு நடைபெறும்.
 
ஏப்ரல் 28ஆம் தேதி டில்லி, கொல்கத்தா அணிகள் மோத இருந்த போட்டி, மே 7ல், இரவு 8 மணிக்கு நடைபெறும்.
 
கொல்கத்தா அணி சென்னையில் ஏப்ரல் 30ஆம் தேதி விளையாட வேண்டிய போட்டி, ஏப்ரல் 28ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. ஏப்ரல் 30ஆம் தேதி சென்னை - கொல்கத்தா அணிகள் மோதும் போட்டி ஈடன் கார்டனில் நடைபெறும். 
 
ஏப்ரல் 14ஆம் தேதி மாலை 4 மணிக்கு ராஜஸ்தான் - மும்பை அணிகள் மோதவிருந்தப் போட்டி, இரவு 8 மணிக்கு நடைபெறும்.
 
மே 7ஆம் தேதி மாலை 4 மணிக்கு ராஜஸ்தான் - ஹைதராபாத் அணிகள் மோதவிருந்தப் போட்டி, இரவு 8 மணிக்கு நடைபெறும்.

Share this Story:

Follow Webdunia tamil