இதெல்லாம் கேப்டன்ஷிப்பா...? தோனியை வறுத்தெடுத்த காம்பீர்!

Webdunia
புதன், 23 செப்டம்பர் 2020 (15:57 IST)
தோனியின் நேற்றைய போட்டியின் முடிவுகள் குறித்து கவுதம் காம்பீர் கடுமையாக விமர்சித்துள்ளார். 
 
நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிராக ஆடிய சிஎஸ்கே அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. 217 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்ட நிலையில் 200 ரன்களின் சிஎஸ்கே தோல்வியை தழுவியது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தோல்விக்கு முக்கியக் காரணமாக சொல்லப்படுவது தோனியின் கடைசி நேர மந்தமான ஆட்டம்தான் என்று சொல்லப்படுகிறது.
 
இந்நிலையில் தோனியைப் பற்றி கவுதம் காம்பீர் கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் கூறியதாவது, தோனி ஏன் முன்னரே களம் இறங்கவில்லை என புரியவில்லை. தோனி கேப்டனாக அணியை முன்நின்று வழிநடத்தி இருக்க வேண்டாம்? இதை கேப்டன்ஷிப் என அழைக்காதீர்கள். 
 
தோனி இறங்கும் போது ஆட்டம் முடிந்துவிட்டது. கடை சி ஓவரில் 3 கிக்ஸ் அடித்ததில் என்ன பயன்? ஆனால் அதை பெரிதாக பேசுவார்கள். தோனி செய்ததை வேறு கேப்டன் செய்திருந்தால் என்ன ஆகியிருக்கும்? தோனி என்பதால் அவரை யாரும் விமர்சிப்பதில்லை. 
 
தோனி முன்னால் இறங்கி அவுட் ஆகியிருந்தாலும் பரவாயில்லை, குறைந்தபட்சம் முன்நின்று அணியை வழிநடத்தி இருக்கலாம். இது சரியான கேப்டன்சியே இல்லை. தோனி போன்ற ஒருவரிடம் இதை யாரும் எதிர்ப்பார்க்கவில்லை என விமர்சித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானுக்கு ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியை அனுப்பலாமா? பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு..!

மூன்று ஃபார்மட்டுகளிலும் 100 விக்கெட்டுகள் எடுத்த முதல் இந்திய வீரர்.. பும்ராவுக்கு குவியும் வாழ்த்துக்கள்..!

தென்னாபிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டி.. 102 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி..!

தென்னாப்பிரிக்கா அணிக்கு திரும்பும் டேவிட் மில்லர்.. இந்திய அணியில் சுப்மன் கில்- ஹர்திக்.. இன்று முதல் டி20 போட்டி..!

உணர்ச்சிகளை வெளிப்படுத்தினால் கிரிக்கெட் வீரர்களுக்கு மரியாதை கிடைக்காது: அஸ்வின்

அடுத்த கட்டுரையில்
Show comments