Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இதெல்லாம் கேப்டன்ஷிப்பா...? தோனியை வறுத்தெடுத்த காம்பீர்!

Webdunia
புதன், 23 செப்டம்பர் 2020 (15:57 IST)
தோனியின் நேற்றைய போட்டியின் முடிவுகள் குறித்து கவுதம் காம்பீர் கடுமையாக விமர்சித்துள்ளார். 
 
நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிராக ஆடிய சிஎஸ்கே அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. 217 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்ட நிலையில் 200 ரன்களின் சிஎஸ்கே தோல்வியை தழுவியது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தோல்விக்கு முக்கியக் காரணமாக சொல்லப்படுவது தோனியின் கடைசி நேர மந்தமான ஆட்டம்தான் என்று சொல்லப்படுகிறது.
 
இந்நிலையில் தோனியைப் பற்றி கவுதம் காம்பீர் கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் கூறியதாவது, தோனி ஏன் முன்னரே களம் இறங்கவில்லை என புரியவில்லை. தோனி கேப்டனாக அணியை முன்நின்று வழிநடத்தி இருக்க வேண்டாம்? இதை கேப்டன்ஷிப் என அழைக்காதீர்கள். 
 
தோனி இறங்கும் போது ஆட்டம் முடிந்துவிட்டது. கடை சி ஓவரில் 3 கிக்ஸ் அடித்ததில் என்ன பயன்? ஆனால் அதை பெரிதாக பேசுவார்கள். தோனி செய்ததை வேறு கேப்டன் செய்திருந்தால் என்ன ஆகியிருக்கும்? தோனி என்பதால் அவரை யாரும் விமர்சிப்பதில்லை. 
 
தோனி முன்னால் இறங்கி அவுட் ஆகியிருந்தாலும் பரவாயில்லை, குறைந்தபட்சம் முன்நின்று அணியை வழிநடத்தி இருக்கலாம். இது சரியான கேப்டன்சியே இல்லை. தோனி போன்ற ஒருவரிடம் இதை யாரும் எதிர்ப்பார்க்கவில்லை என விமர்சித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்க அணி நிர்வாகம் இந்தியா முழுதும் சுற்றி திறமைகளைக் கண்டுபிடிக்கிறது- ஹர்திக் பாண்ட்யா மகிழ்ச்சி!

மும்பை இந்தியன்ஸின் புதிய கண்டுபிடிப்பு ‘அஸ்வனி குமார்’.. பும்ராவுக்கு துணையாக இன்னொரு டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் ரெடி!

களத்துல வேணா சொதப்பலாம்.. ஆனா சோஷியல் மீடியாவுல நாங்கதான் – RCB படைத்த சாதனை!

இன்னும் ஒரு ஓவர் குடுத்தா குறைஞ்சு போயிடுவீங்களா? ஜெயித்தும் ஹர்திக்கை போட்டு பொளக்கும் ரசிகர்கள்! காரணம் இந்த புது ப்ளேயர்தான்!?

அந்த செய்தி வந்ததில் இருந்து பசியே இல்லை- அறிமுகப் போட்டியில் கலக்கிய அஸ்வனி குமார் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments