Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடக்குமா.. நடக்காதா.. ஐபிஎல் 2020 தலைவிதி தான் என்ன?

Webdunia
வெள்ளி, 20 மார்ச் 2020 (15:42 IST)
ஐபிஎல் தலைவிதி ஏப்ரல் 15 ஆம் தேதிக்கு பின்னரே தெரியவரும் என மத்திய விளையாட்டு துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார். 
 
கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகயாக இம்மாதம் 29 ஆம் தேதி நடக்க இருந்த ஐபிஎல் போட்டிகள் ஏப்ரல் 15 ஆம் தேதி நடக்கும் என அறிவிப்படது. ஆனால் அதன் பின்னர் நடத்தப்படுமா என்பது குறித்து உறுதியாக அறிவிக்கப்படவில்லை.
 
இதனால் பிசிசிஐக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாகத் தெரிகிறது. இந்நிலையில் பிசிசிஐ ஜூன் அல்லது செப்டம்பர் மாதத்திலாவது அல்லது வெளிநாடுகளில் வைத்தாவது ஐபிஎல் தொடரை நடத்த வேண்டும் என்ற முடிவில் இருப்பதாகத் தெரிந்தது. 
 
மேலும் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி ஐபிஎல் போட்டிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு போட்டி நடத்தப்படும் என தெரிவித்திருந்த நிலையில் மத்திய விளையாட்டு துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ ஐபிஎல் குறித்து பதில் அளித்துள்ளார். அவர் தெரிவித்ததாவது... 
 
ஏப்ரல் 15 ஆம் தேதிக்கு பின்னர் நிலைமைக்கு ஏற்றவாறு ஐபிஎல் குறித்து முடிவெடுக்கப்படும். ஐபிஎல் போட்டிகளை பிசிசிஐ ஒலிம்பிக் விளையாட்டுகளை போலவே பார்க்கிறது. ஆனால், இப்போது மக்களை விட விளையாட்டு முக்கிமில்லை என தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

நிக்கோலஸ் பூரன் பேயாட்டம்… மும்பை அணிக்கு இமாலய இலக்கை நிர்ணயித்த லக்னோ!

MIvsLSG: டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

18 ரன்கள்.. 18 ஓவர்.. 18ம் தேதி.. 18ம் ஜெர்சி! 18க்குள்ள இவ்ளோ விஷயம் இருக்கா? – வரலாறு காணாத CSK vs RCB போட்டிக்கு தயாரா?

வலைப்பயிற்சியில் ஆச்சர்யப்படுத்திய தோனி… ஆர் சி பி அணிக்கு எதிரான போட்டிக்கு 100 சதவீதம் தயார்!

தோனி இன்னும் இரண்டு ஆண்டுகள் விளையாடுவார்… முன்னாள் சி எஸ் கே வீரர் நம்பிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments