Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை கழட்டி விட்ட 8 பேர் – தப்பித்தது யார் யார்??

Webdunia
புதன், 16 நவம்பர் 2022 (10:16 IST)
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது எட்டு வீரர்களை இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் இருந்து விடுவித்துள்ளது.


2023 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டி அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற இருக்கும் நிலையில் அடுத்த மாதம் அதாவது டிசம்பர் மாதம் ஐபிஎல் போட்டியின் மினி ஏலம் நடைபெற உள்ளது. இந்நிலையில் 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் பங்கேற்கும் 10 அணிகளும் தக்கவைத்துக்கொள்ளும் வீரர்கள் மற்றும் விடுவிக்கும் வீரர்களின் பெயர்களை நேற்று மாலை அறிவித்தன.

இதில் அதிகளவு வீரர்களை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி விடுவித்துள்ளது. இதனைத்தொடர்ந்து சென்னை அணி தனது எட்டு வீரர்களை விடுவித்துள்ளது. சிஎஸ்கே அணியில் இருந்து டுவைன் பிராவோ, ஆடம் மில்னே, கிறிஸ் ஜோர்டான், என் ஜெகதீசன், சி ஹரி நிஷாந்த், கே பகத் வர்மா, கேஎம் ஆசிப், ராபின் உத்தப்பா (ஓய்வு) ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
ALSO READ: ஐபிஎல் ஏலம்; ஒவ்வொரு அணியிடம் எவ்வளவு தொகை இருக்கிறது?
சிஎஸ்கே அணியில் தொடரும் வீரர்கள்:
மகேந்திர சிங் தோனி (C & WK), ரவீந்திர ஜடேஜா, டெவோன் கான்வே, மொயீன் அலி, ருதுராஜ் கெய்க்வாட், ஷிவம் துபே, அம்பதி ராயுடு, டுவைன் பிரிட்டோரியஸ், மகேஷ் தீக்ஷனா, பிரசாந்த் சோலங்கி, தீபக் சாஹர், முகேஷ் சவுத்ரி, சிமர்ஜீத் சிங், துஷார் தேஷ்பன்டே, துஷார் தேஷ்பன் ஹங்கே , மிட்செல் சான்ட்னர், மதீஷா பத்திரனா, சுப்ரான்ஷு சேனாபதி.

 
Edited by: Sugapriya Prakash

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஹாட்ரிக் வெற்றியை தொடுமா ஆர்சிபி? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்! - இன்று RCB vs GT மோதல்!

விக்கெட் எடுத்துவிட்டு சீன் போட்ட திக்வேஷ் ராதி.. தம்பி அபராதம் கட்டுங்க என குட்டு வைத்த பிசிசிஐ!

எங்களுக்குத் தேவையான தொடக்கம் இதுதான் – பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயாஸ் மகிழ்ச்சி!

தொடர்ந்து சொதப்பும் பண்ட்… கேலி பொருளான சஞ்சய் கோயங்கா!

எங்க அணி நிர்வாகம் இந்தியா முழுதும் சுற்றி திறமைகளைக் கண்டுபிடிக்கிறது- ஹர்திக் பாண்ட்யா மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments