நான் சொன்னது லஷ்மனுக்கு கேட்டுவிட்டதோ? சஹாவின் பேட்டிங் பற்றி சேவாக் கருத்து!

Webdunia
புதன், 28 அக்டோபர் 2020 (16:15 IST)
சில நாட்களுக்கு முன்னர் சேவாக் ஹைதராபாத் அணியில் ஏன் விருத்திமான் சஹாவை இறக்கக் கூடாது எனக் கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்திய அணியின் முன்னாள் வீரர் விரேந்திர சேவாக் ஒவ்வொரு ஐபிஎல் போட்டிக்குப் பின்னரும் viru ki baithak என்ற நிகழ்ச்சியில் தனது வழக்கமான நகைச்சுவை பாணியில் அலசல் விமர்சனம் செய்துவருகிறார். சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கு இடையேயான போட்டிக்குப் பின்னர் அவர் மும்பை அணியின் பேட்ஸ்மேன்களான ரோஹித் ஷர்மா மற்றும் சவுரவ் திவாரி ஆகியோரை வடா பாவ் மற்றும் சமோசா பாவ் எனக் கேலி செய்துள்ளார்.

இந்நிலையில் நேற்றைய போட்டியில் ஹைதராபாத் அணியைச் சேர்ந்த விருத்திமான் சஹா சிறப்பான பேட்டிங்கை மேற்கொண்டார். அவர் இந்த சீசனில் இறங்கிய முதல் போட்டி அதுதான். இந்நிலையில் போட்டிக்கு பின்னர் பேசிய சேவாக் ‘நான் சில நாட்களுக்கு முன்னர்தான் அனுபவமும் திறமையும் வாய்ந்த சஹாவை ஏன் இறக்கக் கூடாது எனக் கேட்டிருந்தேன். அது லஷ்மனுக்கு கேட்டுவிட்டது போல’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

SRH ஜெயித்தாலும் அபிஷேக் சர்மாவுக்கு அபராதம்.. கடும் எச்சரிக்கை விடுத்த பிசிசிஐ..!

நான் மட்டும் இப்போது ஐபிஎல் தலைவராக இருந்திருந்தால் லக்னோ அணியை தடை செய்திருப்பேன்: லலித் மோடி

15 ஆண்டுகளுக்கு முன் உலகக்கோப்பை பெற்ற நாள் இன்று.. தோனி செய்த சம்பவம்..

தோல்வி மட்டுமல்ல, மோசமான சாதனையை பதிவு செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்.. டெல்லி அபார வெற்றி..!

ஐபிஎல் இனி வேண்டாம்.. பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் விளையாடும் முன்னணி வீரர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments