Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடைசியாக ஆசையை நிறைவேற்றிக்கொண்ட நடராஜன்!

Webdunia
புதன், 14 அக்டோபர் 2020 (13:04 IST)
சேலத்தைச் சேர்ந்த நடராஜன் தன்னுடைய பந்துவீச்சில் தோனியை அவுட் ஆக்க வேண்டும் என்ற ஆசையை நிறைவேற்றிக் கொண்டுள்ளார்.

இந்த ஆண்டு நடைபெற்று வரும் ஐபிஎல் தமிழ் மக்களால் அதிகம் கவனிக்கப்பட்ட வீரர்களாக நடராஜனும், வருண் சக்கரவர்த்தியும் உள்ளனர். இவர்கள் இருவரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதே இதற்குக் காரணம். யார்க்கர் ஸ்பெஷலிஸ்ட் என பெயர் வாங்கியுள்ள நடராஜன் நேற்றைய போட்டியில் சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனியின் விக்கெட்டை வீழ்த்தினர். இதன் மூலம் தனது வாழ்நாள் ஆசைகளுள் ஒன்றை அவர் சாதித்துள்ளார்.

இதுகுறித்து சில நாட்களுக்கு முன்னர் அவர் ரவிச்சந்திரன் அஸ்வினிடம் நடத்திய கலந்துரையாடலில் தோனியின் விக்கெட்டை வீழ்த்துவது எனது வாழ்நாள் கனவுகளுள் ஒன்று எனக் கூறியிருந்தார்.
 

தொடர்புடைய செய்திகள்

மழையால் தாமதமாகும் ராஜஸ்தான் - கொல்கத்தா போட்டி.. போட்டி ரத்தானால் 2ஆம் இடம் யாருக்கு?

ஐதராபாத் அபார வெற்றி.. 214 ரன்கள் அடித்தும் பஞ்சாப் பரிதாபம்.. புள்ளிப்பட்டியலில் 2ஆம் இடம்..

எங்க போனாலும் கேமராவை தூக்கிக்கிட்டு உள்ள வந்துடுவீங்களா? – ஸ்டார் ஸ்போர்ட்ஸை பொறிந்து தள்ளிய ஹிட்மேன்!

சாதனை படைத்த RCB vs CSK போட்டி..! இத்தனை கோடி பேர் பார்த்தார்களா..?

சாம்ராஜ்யங்கள் சரியலாம்! படைத்தலைவன் மடிவதில்லை! தோனி குறித்து ஜெயக்குமார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments