Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல்-2020; சீறிய சென்னை கிங்ஸ்...20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி..

Webdunia
செவ்வாய், 13 அக்டோபர் 2020 (23:24 IST)
இன்று நடைபெறும் சென்னை மற்றும் ஐதராபாத் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை அணி கேப்டன் தோனி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார்.

கடந்த 7 போட்டிகளில் சென்னை அணி தற்போது முதல் முறையாக முதலில் பேட்டிங் செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை அணியில் ஜெகதீசனுக்கு பதிலாக பியூஸ் சாவ்லா களமிறக்கப்பட்டுள்ளார். அதேபோல் ஐதராபாத் அணியில் அபிஷேக் சர்மாவுக்கு பதிலாக நதீம் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இரு அணிகளின் விளையாடும் பதினொருவர் குறித்த தகவல் பின்வருமாறு:

சென்னை அணி: வாட்சன், டீபிளஸ்சிஸ், அம்பத்தி ராயுடு, தோனி, ஜடேஜா, சாம் கர்ரன், பிராவோ, தீபக் சஹார், ஷர்துல் தாக்கூர், கரன் சர்மா, பியூஷ் சாவ்லா

ஐதராபாத் அணி: டேவிட் வார்னர், பெயர்ஸ்டோ, மனிஷ் பாண்டே, வில்லியம்சன், ப்ரியம் கார்க், விஜய்சங்கர், ரஷீத் கான், நதீம், சந்தீப் சர்மா, கலீல் அகமது மற்றும் நடராஜன்
முதலில் பேட்டிங் செய்த சென்னை அணியினர் நிதானமாக விளையாடி இன்று 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் சேர்த்து ஐதராபாத் அணிக்கு 168 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணையித்தது.

இதையடுத்து ஆடிய ஹைதராபாத் அணி, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் எடுத்து 20 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.

சென்னை அணி தொடர் தோல்விகளுக்குப் பிறகு இறு 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தொடர்புடைய செய்திகள்

விராட் கோலி தன் சொந்த ஊர் அணிக்காக சென்று விளையாடி கோப்பையை வெல்லவேண்டும் – முன்னாள் வீரர் கருத்து!

ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு முன்பே அமெரிக்கா கிளம்பும் இந்திய அணி வீரர்கள்!

“இந்திய அணிக்கு பயிற்சியாளராக வந்தால் அரசியலும் அழுத்தமும் இருக்கும்” – ஆஸி முன்னாள் வீரருக்கு கே எல் ராகுல் அட்வைஸ்!

கே எல் ராகுலாவது திட்டுதான் வாங்கினார்… இந்த வெளிநாட்டு வீரருக்கு அறையே விழுந்தது… ஐபிஎல் ஓனர் அட்ராசிட்டிஸ்!

“இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியை இந்த காரணத்தால் நிராகரித்துவிட்டேன்” – ரிக்கி பாண்டிங் தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments